tamilnadu

img

விவாதத்திற்கான களமாக இதழியல் இருக்க வேண்டும்: என்.ராம்

சென்னை, ஏப். 2- கருத்துப்பரிமாற்றம், விவாதம் ஆகியவற்றின் களமாக இதழியல் இருக்கவேண்டும் என்று மூத்த பத்திரி கையாளர் என்.ராம் கேட்டுக்கொண்டு ள்ளார்.  லயோலா கல்லூரியின் 98ஆம் ஆண்டு கல்லூரி தின விழா சனிக்கிழமை (ஏப். 1) நடைபெற்றது. 60 ஆண்டுகளுக் கும் மேலாக பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவரான தி ஹிந்து குழு மத்தின் இயக்குநர் என்.ராமுக்கு “லயோலா விருது” வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.ராம் பேசுகை யில், இக்கல்லூரியில் தாம் கற்றுக் கொண்டவைகளில், அரசியலமைப்பு சட்டம் முக்கியமானவை.

அது இன்னும் காலத்தித்கேற்ப  புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது நீர்த்துப்போய்விடும் என்றார்.  மதச்சார்பின்மை  நமது அரசிய லமைப்பு சட்டத்தில்   இன்றியமையாத பகுதியாக உள்ளது. ஜனநாயகம், சமத்துவம், அனைவரையும் மரியாதை யுடன் நடத்துதல் ஆகியவை மதச்சார் பின்மைக்குள் அடங்கியுள்ளது என்றார்.  பெரும்பான்மைவாதம் முன்வைக் கும் சவால்களை புறக்கணிக்க முடி யாது.  தேசியவாதம் என்ற பெயரில் சில நேரங்களில்  நடப்பது உண்மை யில் மிகை தேசியவாதம் மட்டுமல்ல பிரச்சனைகளுக்கு மதச்சாயம் பூசு வதாகும்.  ஒரு பத்திரிகையாளராக நான் பார்க்கும் முக்கிய பிரச்சனை, இந்தி யாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள பெரும் பான்மைவாதத்தால் எழுந்துள்ள  சவா லாகும். கருத்துப்பறிமாற்றம் மற்றும் விவாதத்திற்கான களமாக இதழியல் மாற்றப்பட வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவு ரையின் மையப் பகுதியில் கூறப்பட் டுள்ளவற்றை காண இதுபோன்ற ஒரு கல்லூரிக்கு வர வேண்டும்.  நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகி யவை அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில்  இடம்பெற்றுள்ள முக்கி யமான அம்சங்கள்.  ஆனால் இன்று மதச்சார்பின்மையை  குறை கூறுவது  நாகரீகமாக மாறியுள்ளது. சில தாராள வாத பத்திரிகையாளர்கள், மற்றும் தாராளவாத  அறிவாளிகள் என்றுகூறப்படுவோர் இந்த நாகரீகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் ராம் குறிப்பிட்டார்.   

நீதிபதி சத்தியநாராயண பிரசாத்

நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் பேசுகையில், கல்லூரியில் இளங்கலை வரலாறு மாணவராக இருந்த நாட்களில்  நேரம் தவறாமை, நேர்மை, பணிவு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எவ்வாறு கற்றுக் கொண்டேன் என்பதை மாணவர் களுடன் பகிர்ந்து கொண்டார்.  இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டும், யார் மனதை புண்படுத்தவோ, வெறுக்கவோ கூடாது. ஏழைகளுக்கு குறிப்பாக கல்வியைத் தொடர உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.  மேலும் கடினமான காலங்களில் நமக்கு  ஆதரவாக நின்ற வர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார். முன்னதாக லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஏ.தாமஸ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். லயோலா நிறுவனங்களின் தாளாளர் பிரான்சிஸ் பி.சேவியர், செயலாளர் ரெ.பி.ஜெயராஜ், துணை முதல்வர் ஏ.ஜான் மரியா சேவியர், ஜே.ஏ.கல்லூரி துணை முதல்வர் சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.