tamilnadu

img

வீழ்ந்து நொறுங்கியது 28 குடியிருப்புகள் மட்டுமல்ல! - ராமச்சந்திர வைத்தியநாத்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தி ஃபூல்  (THE FOOL) என்றொரு ரஷியப் படத்தை பார்க்க நேரிட்டது.  இப்பொழுதும் இப்படத்தை இலவசமாக யூ டுயூப்பில் பார்க்கலாம்.  யூரி பைகாவ் என்பவர் எழுதி இயக்கிய மகத்தான படம் அது.

பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து வரக்கூடிய ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வீழும் நிலையில் இருப்பதை ஒரு இளம் பொறியியலாளர் அறிவியல் அடிப்படையில் அறிகிறார். இத்தகைய கட்டுமானத்திற்கு காரணமான ஆட்சியாளர்கள், நகர நிர்வாகிகள், லஞ்சப் பேர்வழிகள்,  ஒப்பந்ததாரர் கள், நீதித் துறை,  காவல் துறை ஆகியவர்களுக்கிடை யே கள்ளக்கூட்டு இருந்து வருவதையும், ஒவ்வொ ருவரும் மற்றவர்களின் பிடியில் சிக்கியிருப்பதையும் நேரிடையாகக் காண்கிறார்.  நகர நிர்வாகத்தின் நடவடிக்கை சரியாக இல்லை என  அடுக்கு மாடிவாசி களை   எச்சரிக்கிறார்.  ஆயின் கட்டுமானம் வீழவில்லை.   இறுதிக் காட்சியில் குடியிருப்போர் அந்த இளைஞன் திமா நிகிதின்னை அடித்து துவம்சம் செய்கின்றனர்.   கட்டுமானம் நிச்சயம் வீழப்போகிறது என்பதை பார்வையாளர்களாகிய நாம் உணர்கிறோம்.   மோசமான அடுக்கு மாடி குடியிருப்பு பற்றிய  கதையாக சொல்லப்பட்டாலும், நுட்பமாக பார்க்கை யில்தான் சோவியத் சமூகத்தின் வீழ்ச்சி பற்றிய சித்த ரிப்பு என்பதை உணர்கிறோம்.  சோவியத் வீழ்ச்சிக்குப் பின்  சமூகம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதை அங்கே குடியிருப்போரின் மாறுபட்ட நிலை களிலிருந்தும், குணப்பாங்கிலிருந்தும்  வெட்ட வெளிச்சமாக நாம் அறிகிறோம்.  

இப்படத்தின் காட்சியையோ கதையையோ விவ ரிக்கத் தேவையில்லை.  ஏனெனில் அது நேரடியாக சென்னையில் அரங்கேறியுள்ளதிலிருந்தே  நாம் அதை புரிந்து கொள்ளமுடியும்.     வீழும் நிலையில் உள்ள குத்தி கேசவபிள்ளை பார்க் குடியிருப்புகளும்,   திருவொற்றியூர் அருவா குளத்தில் வீழ்ந்து நொறுங்கிய  இருபத்தி எட்டு குடி யிருப்புகளும்  யூரி பைகாவ்வின் படத்தை  இங்கே நிஜமாக்கியிருக்கிறது.  கட்டுமானம், பொறியாளர், ஒப்பந்ததாரர், முந்தைய ஆட்சியாளர்,  நிவாரணம், ஆய்வுக் குழு, முறையான பராமரிப்பு என்பதெல்லாம் சீற்றத்தை நீர்க்கச் செய்யும் உத்திகளேயன்றி வேறில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் மட்டுமின்றி, தற்போ தைய நிகழ்வும் உறுதிப்படுத்தவே செய்கிறது.  கே. பி. பார்க் விவகாரத்தில் நடைபெறுபவை யாவுமே  மூடு மந்திரமாகத்தான் உள்ளது.  இங்கே அருவா குளத்தில் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்ப தற்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியது என்று சால்ஜாப்பு முன்கூட்டியே  சொல்லப்பட்டு வரு கிறது.  தவிர இதை பெரும்பாலான ஊடகங்களும் வெளிப்படுத்தியுள்ளன.  

நகரில் உயர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவின ருக்காக அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கட்டுமா னங்கள் மட்டுமின்றி, பல்வேறு தனியார் கட்டுமானங் கள்  நாற்பது ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கை யில், குறிப்பாக 67க்குப் பின்னர் சென்னை அண்ணா நகரில் உருவான அடுக்கு மாடி வீடுகளும், கீழ்ப்பாக்கம் டவர் பிளாக்கும்  இன்றும் உறுதியாக இருக்கும் போது அதற்குப் பின்னர் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய  வீடுகள் மட்டும் விழுந்து நொறுங்கு வானேன்? இன்னும் சொல்லப் போனால் 1892க்கு முன்னர் மதராஸ்  சதர் கோர்ட் லஸ் சர்ச் சாலையின் மேற்கு கோடியில் ஆழ்வார்பேட்டை பகுதியில் சதர் கார்டன் எனும் வளாகத்தில் செயல்பட்டு வந்தி ருக்கிறது.  பின்னரே 1892 ஜூலை 12 அன்று  அன் றைய கவர்னர் வென்லக் பிரபு திறந்து வைத்த தற் போதைய நீதிமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்ந்தி ருக்கிறது.   பழைய சதர் கார்டனில் உள்ள நூறாண்டுக ளுக்கு மேற்பட்ட அந்த மாளிகையில்தான் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயத் வாழ்ந்து வந்ததை 2008 வாக்கில் கண்டிருக்கிறேன்.

மதராஸ் பட்டண வரலாற்றில் கீர்த்தி வாய்ந்தவ ராக விளங்கிய தட்டிகொண்டா பெருமாள் செட்டி அன்னாளில் மிகப் பெரும் கட்டுமான ஒப்பந்தாரர் ஆவர். அவர் சேலம், நாமக்கல்லைச் சார்ந்தவரல்ல என்பதை முதலிலேயே நாம் அறிந்து கொள்வது நல்லது.    சென்னை சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன், மியூசியம் தியேட்டர், நேஷனல் ஆர்ட் காலரி,  மதராஸ் ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள லைட் ஹவுஸ்,  வடக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க்,  ஜெனரல் போஸ்ட்  ஆஃபீஸ்  தவிர வேறு பல கட்டிடங்க ளையும்  அவர் கட்டியுள்ளார்.   இது தவிர மவுண்ட் ரோடிலேயே நூறாண்டுகளு க்கு மேற்பட்ட  ஏராளமான கட்டுமானங்கள் இருந்து வருகின்றன.  ஹிக்கின்பாதம்ஸ்,  தற்போது அகர் சந்த் மாளிகையாக இருக்கக்கூடிய கலீல் மாளிகை, பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்  இப்படி சொல்லிக் கொண்டே  போகலாம்.

நானே கலீல் பில்டிங்கில் உள்ள ஒரு அலுவல கத்தில் முப்பதாண்டுகளுக்கு  மேலாக பணியாற்றியி ருக்கிறேன்.  எந்தவித பராமரிப்பையும் தற்போதைய உரிமையாளர்களான அகர்சந்த் குடும்பத்தினர் மேற்கொள்ளாத நிலையிலும், நாங்கள் அச்சமின்றி அந்த இடத்தில் பணியாற்றியிருக்கிறோம்.   சென் னையே நீருக்காக தத்தளித்துக் கொண்டிருக்கும் காலங்களில் கூட அந்த வளாகத்தில் உள்ள வித்தி யாசமான அமைப்பைக் கொண்ட இரு கிணறுகள் நீரை வாரி வழங்கிக் கொண்டிருந்தன.     நூறாண்டுகளுக்கு மேற்பட்ட இத்தனை கட்டுமா னங்கள் பைசா கோபுரம் போன்று சாயும் நிலையில் கூட இல்லாத போது குடிசை மாற்று வாரிய வீடுகள் மட்டுமே  ஏன் உறுதியற்ற நிலையை கொண்டுள் ளது என்று நாம் கேட்கத் தவறுகிறோம்.  அப்படி யென்றால் அதே கால கட்டங்களில் கட்டப்பட்ட எழிலகமும், குறளகமும்  இன்று அப்பளம் போல் நொறுங்கிக் கிடக்கிறதா?

எந்த மக்கள் இந்த நகரை மாநகராக்குவதற்கு  தங்கள்  உழைப்பை அளித்தார்களோ அவர்களை மேலும் வன்மத்துடன் சுரண்டுவதுதான் அவர்களை நகரிலிருந்து வெளியேற்றி புதிய சேரிகளில் குடிய மர்த்துவது என்பது.  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ் நிலையை கணக்கில் எடுக்காது வைப்புத் தொகை, மின் தூக்கிக்கான நிர்வாகச் செலவு என்றெல்லாம் அவர்களிடத்தில் ஒரு பக்கம் வசூலிப்பது பற்றி அங்கும் இங்குமாக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தும் போராட்டங்களைக் கடந்து  கட்டுமானம் பற்றி  பொது வெளியில் மற்ற எவரும் வாய் திறப்பதேயில்லை.  “அரசு நிர்வாகத்தின் பிடியில் ஒப்பந்ததாரர்கள் இருப்பதற்குப் பதிலாக  ஒப்பந்ததாரர்களின் பிடியில் அரசு நிர்வாகம் சிக்கிக் கொண்டு, மக்கள் நலனைப் பேணாது  நெறிமுறைகளை இழந்து அரசு நிர்வாண மாக நிற்கிறதா?” என்ற  கேள்வியை பைகாவ் தன் திரைப்படத்தில் எழுப்பியிருந்தார்.  தங்கள் குடியி ருப்புகளின்  வீழ்ச்சி பின்னால் இருப்பதை அறியாது மக்கள்  திமாவை தாக்கியது  திரைப்படத்தில் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது.   ஆயின் அதனை சென்னை யிலும் அரங்கேறாது தடுப்பது  மக்களோடு இணை ந்து செயல்படும் நம் கரங்களில்தான் உள்ளது.