tamilnadu

img

நீதிபதிகள் மநுநீதியை மேற்கோள் காட்டுவது ஆபத்தானது

திருச்சூர், ஜூன் 17- அரசியல் சாசன விழுமி யங்களை நிலைநிறுத்துவதற்கு பதிலாக, பல நீதிபதிகள் மனுஸ்  மிருதி, பகவத் கீதை, ராமாயணம்  போன்றவற்றை தங்கள் தீர்ப்பு களில் மேற்கோள் காட்டியுள்ளனர் என நீதிபதி கே.சந்துரு கூறினார். செவ்வாய் தோஷத்தை சரிபார்க்க வும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள் ளது. இது மிகவும் ஆபத்தான நிலை  என்றார்.  திருச்சூரில், சமதர்ஷி அமைப்பு இடஒதுக்கீடு, சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசினார். இரண்டு சாதிகளில் பிறக்கும் குழந்தைக்கு இடஒதுக்கீட்டின் பலனைப் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. மனுஸ் மிருதி முறைப்படி இரண்டு வெவ் வேறு சாதிகளில் பிறந்த குழந்தை சண்டாளன் என அந்த நீதிமன்றம் கூறியது. அலகாபாத் சிறுமி பாலி யல் வல்லுறவு வழக்கில், குற்றவாளி  திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அந்த சிறுமிக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக வாதம் வந்தது. இரு வருக்கும் லக்னோ பல்கலைக்கழ கத்தின் ஜோதிட ஆய்வுத் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நீதிபதிகளின் அணுகுமுறைதான் இவற்றில் வெளிவருகிறது. 

இந்திய அரசமைப்புச் சட்டத்  திற்குப் பதிலாக வேறொரு அர சமைப்பைக் கொண்டுவர முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. சமீபத்தில் சில துறவிகள் அதை உருவாக்கியுள்ளனர். அதன்படி இந்துக்களுக்கு மட்டுமே வாக்கு ரிமை உள்ளது. நான் அதை  வேடிக்கையாக நினைத்தேன். ஆனால், புதிய நாடாளுமன்றத்தின்  பதவியேற்பு விழாவைப் பார்த்த தும், அது நகைச்சுவையல்ல என் பதை உணர்த்தியது. துறவிகள் செங்கோல் ஒப்படைப்பது நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதும் ஒரு பகுதியாகும். கர்நாடக தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று  அமித்ஷா கூறினார். இது அரச மைப்புக்கு எதிரானது. இதற்கு கர்  நாடக மக்கள் பதில் அளித்துள்ள னர். இதன் மூலம் மக்களின் அரச மைப்பு உணர்வு உயர வேண்டும் என்றும் அவர் கூறினார்.  சாகித்ய அகாடமி அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் இ.சலா வுதீன் நடுவராக இருந்தார். கே. சோமபிரசாத், டாக்டர். கே.எம்.சீதி  விரிவுரையாற்றினார். பி.என்.கோபி கிருஷ்ணன், லினி பிரியா வாசவன் ஆகியோர் பேசினர்.