தமிழ்நாடு மீதான வன்மத்தையே காட்டுகிறது கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாதது அடாவடித்தனமாகும்!
ஒன்றிய அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்
சென்னை, ஜூன் 12 - கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை யை தாமதப்படுத்தாமல் வெளியிடுமாறு ஒன்றிய பாஜக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: புராண - புனைகதைகளுக்கு மாறான அகழாய்வு முடிவுகள் கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து, ‘இன்னமும் அறிவியல்பூர்வமான தரவு கள் தேவை’ என ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் கட்டமைக்க முயல்கிற திணிப்பிற்கு மாறாக, கீழடி அகழாய்வின் முடிவுகள் வெளிவந்து கொண்டே இருப்பதுதான். இல்லாத ‘சரஸ்வதி நாகரிகம்’ போன்றதல்ல கீழடி வரலாறு கீழடி அகழாய்வில் மண் அள்ளிப் போடும் நோக்கத்துடன் அகழாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அசா மிற்கு மாற்றப்பட்டார். பிறகு வந்த ஸ்ரீராம் என்ற அதிகாரி கீழ டியில் மேற்கொண்டு ஆய்வு செய்ய எது வும் இல்லை என்றார். ஒன்றிய அகழாய்வுத்துறை நிதி ஒதுக்க மறுத்து ஆய்விலிருந்து விலகிக்கொண்டது. இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை நடத்தும் ஆய்வு, தமிழர்கள் வாழ்வியல் குறித்தும், தமிழ்மொழியின் தொன்மை குறித்தும் விவரிக்கும் சங்க இலக்கிய பாடல்களின் பொருண்மைச் சான்று களை வெளிக்கொணர்ந்த வண்ணம் உள்ளன. இதை, ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று சரடு விடுபவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஒன்றிய அரசு மூலம் முட்டுக்கட்டை போடு கிறார்கள். இது வரலாற்றுக்கும், அறி வியலுக்கும் இழைக்கப்படும் துரோக மாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆர்எஸ்எஸ் கட்டுக்கதைகளை அறுத்தெறியும் தமிழகம் வரலாறு மற்றும் அறிவியலுக்கு புறம்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தின் காரணமாக வும் ஒன்றிய பாஜக அரசு இந்த நிலை பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. ஒன்றிய அரசின் இந்த அடாவடித் தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கற்பனை அடிப்படையிலோ, நம்பிக்கை அடிப்படையிலோ கீழடி அக ழாய்வு அறிக்கையை எழுதவில்லை, உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொல்லியல் அறிவியல் அடிப்படை யிலும், தரவுகளின் அடிப்படையிலும் எழுதியுள்ளதாக அமர்நாத் ராம கிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, அழ கன்குளம், கொடுமணல் என தமிழ்நாட் டில் நடைபெறும் அகழாய்வுகள் வெளிப்ப டுத்தும் உண்மை வரலாறு, இந்தியாவின் பன்மை வரலாறு ஆர்எஸ்எஸ் பரிவாரத் தின் கட்டுக் கதைகளை அறுத்து எரிகிறது. அதிகாரத்தின் வாள்முனையால் வர லாற்றை திருத்தமுடியாது என்பதே வரலாறு. எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உள்ளது உள்ளபடி தாமதமில்லாமல் வெளியிடுமாறு ஒன்றிய அகழாய்வுத்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.