tamilnadu

img

உத்வேகமூட்டும் மக்கள் இயக்கம் இது

“உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுபடுத்த முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் ஒன்றை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும்” - டாக்டர் அம்பேத்கர்

இந்திய சாதிய அமைப்பு குறித்து டாக்டர் அம்பேத்கர் ஆத்திரத்தோடு வெளிப்படுத்திய கருத்து இது. சாதிய அமைப்பு இந்திய சமூக அமைப்பிற்கு மிகப்பெரிய கேட்டை உருவாக்கியுள்ளது. மக்களின் ஐக்கி யத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அது தடை யாக உள்ளது. இது மட்டுமல்ல உண்மை யான அன்பு மற்றும் காதலுக்கும் அது தடை யாக இருக்கிறது. இதனால்தான் சாதிய அமைப்பை அடிப்படையாக கொண்டு ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது என ஆணித்தரமான வார்த்தைகளில் வாதிடுகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்தியாவில் காதல் திருமணங்களுக்கு சாதி மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது. இரு மனங்களுக்கு இடையே காதல் மலரும் ம்போது அது சாதி அமைப்பை தாவிக்குதித்து விடுகிறது என்பது உண்மைதான். ஆனால், இவ்வாறு தாவிக் குதித்த பிறகு சாதி அமைப்பு காதல் மணம் செய்தவர்களை பழி வாங்க களத்தில் இறங்குகிறது. சாதி வெறியர் களின் மூலம் இந்த பழிவாங்கல் அரங்கேற்றப் படுகிறது. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த வர்களின் இல்லற வாழ்விற்கு சாதிய சக்தி களால் எண்ணற்ற இன்னல்கள் உருவாக்கப் படுகின்றன. சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு பிறகு மன மகிழ்ச்சி என்பதற்கு பதிலாக மன அதிர்ச்சிகளையே மணமக்கள் சந்திக்கிறார் கள். இதிலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் சாதி வெறியர்கள் மரண தண்டனை வழங்கு கிறார்கள். ஆம்! மணமகன் அல்லது மணமகள் படுகொலைக்கு ஆளாகிறார்கள். சில சந்தர்ப் பங்களில் இருவருமே படுகொலை செய்யப் படுகிறார்கள். இவ்வாறு படுகொலை செய்யப் பட்டவர்களில் தலித் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். இளவரசன் - திவ்யா, மாரிமுத்து - அபிராமி, திலிப்குமார் - விமலாதேவி, கோகுல்ராஜ் - ஸ்வாதி, சுவாதிஸ் - நந்தினி, கனகராஜ் - வர்ஷினிபிரியா.

இவை வெறும் பெயர்கள் அல்ல. சாதி மறுப்பு காதல் மணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் சாதி அமைப்பால் கொடூரமாக பழிவாங்கப்பட்டவர்கள். மேற்குறிப்பிட்ட இளைஞர்கள் அனைவருமே தலித் பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆம். சாதி யால் தாழ்த்தப்பட்டுள்ள இளைஞர்களை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இந்த இளம்பெண்களின் தாம்பத்ய வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறுவது ஒன்றோ, இரண்டோ அல்ல. மாறாக, கடந்த சில ஆண்டுகளில் பல நூற்றுக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்க ளில் மேல் சாதியை சார்ந்த இளம்பெண்க ளும் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சம்பவங்கள் சட்டத்திற்கு புறம்பானவை தான். ஆனால், சாதிய கட்டமைப்புக்கு ஏற்புடை யவை என்பதால் எவ்வித தயக்கமுமின்றி சாதி வெறியர்களால் அரங்கேற்றப்படுகின்றன. இந்திய அரசமைப்பும் ஆளும் வர்க்கங் களும் மிக்க அதிகாரம் படைத்தவைதான். ஆனால், இந்த அதிகாரம் சாதி மறுப்பு காதல் மணம் செய்து கொண்ட பலரை பாதுகாக்க பயன்படவில்லை - இல்லை, பயன்படுத்தப்பட வில்லை. இந்திய அரசியல் சாசனப்படி இவை அனைத்தும் கொலை குற்றங்கள்தான். ஆனால், அரசியல் சாசன சட்டங்களால் இந்த குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை. காரணம், இந்திய அரசியல் சாசனத்தின் ஆயுட் காலம் 72 ஆண்டுகள். ஆனால், இந்தியாவில் பல நூறு ஆண்டுகள் அரசர்களாலும், பேரரசர் களாலும் அமல்படுத்தப்பட்டது மனு நீதிச் சட்டங்களாகும். சாதி அமைப்பை மீறி இத்திரு மணங்கள் நடைபெற்றதால் மனு நீதிச் சட்டங்களின்படி இப்படுகொலைகள் ஏற்கத் தக்கவைதான். தற்போது அமலில் உள்ள நியாயமான அரசியல் சட்டங்களை விட நீண்ட காலமாக அமலில் இருந்த அநியாய மான மனுநீதிச் சட்டங்களால் சாதிய சக்திகள் வழிநடத்தப்படுவது மிகப்பெரிய வெட்கக் கேடுதான். இந்த வெட்கக் கேடு நீடிப்பதற்கு காரணம் இந்திய சமூக அமைப்பில் தொடரும் கேடுகெட்ட சாதி அமைப்பன்றி வேறல்ல. இந்திய சாதி அமைப்பை அம்பலப்படுத்தி யும் இதன் விளைவாக நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை கண்டித்தும் இப்படு கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலம் முதல் சென்னை வரை 400 கிலோ மீட்டர் தூரம் நடைபயணத்தை நடத்தியது.

இந்த நடைபயண இயக்கத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையேற்றார். மிக எழுச்சியாக நடைபெற்ற இந்த நடைபயண இயக்கம் 2017 ஜூன் 9 முதல் ஜூன் 23 வரை 15 நாட்கள் நடை பெற்றது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு பின்னணியாக தமிழகத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு, சாதியை மீறி திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக பகிரங்கமான மிரட்டலை விடுத்தார். பத்திரிக்கைகளும் இதனை பிரபல செய்தியாக வெளியிட்டன. இதைப்போல கொங்கு வேளாளர் பேரவை திருப்பூரில் கூடி, சாதி மத கலப்பு திருமண மறுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக வும், அப்பேரவையில் கொங்கு சட்டம் ஒன்றை யும் இயற்றிக் கொண்டதாகவும், அதன்படி தான் கொங்கு வேளாளர்கள் செயல்பட வேண்டுமென்றும், இதோடு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கக் கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றியதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. இக்காலத்தில் சில சாதி அமைப்புகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வாபஸ் பெறும்படி தீர்மானம் நிறைவேற்றி தலித்து களுக்கு எதிரான தங்களது நிலைபாட்டை பறைசாற்றிக் கொண்டன. இச்சூழலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக நடைபயண இயக்கத்தை மேற் கொண்டதானது பொருத்தமான நிகழ்வாகும். இந்த நடைபயண இயக்கம் வழி நெடுக பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக நியாயம் கேட்டது. சாதிய ஒடுக்குமுறை களுக்கும் பரவலான சாதி ஆணவப் படு கொலைகளுக்கும் ஆளாகியுள்ள தலித் மக் களை மட்டுமல்ல, மேல் சாதி இந்துக்களை யும் பல்லாயிரக்கணக்கில் சந்தித்தது இப் பயணக்குழு. சாதி ஆணவப் படுகொலைகளால் உயிரை பறிக்கொடுத்த இளைஞர்களை பற்றியும், அதனால் எதிர்கால வாழ்வில் இருளைச் சந்திக்கும் இளம்பெண்களின் வாழ்நிலை பற்றி யும் விளக்கி கூறும்போது சாதி இந்துக்களின் மனசாட்சிகள் குலுங்கின.

பலரது கண்கள் கலங்கின. பயணம் முழுவதிலும் கண்ட பொதுவான அனுபவம் இது. பயணத்தின் துவக்க நிகழ்ச்சி எழுச்சி யாக மட்டுமல்ல உணர்ச்சிப் பிரவாகமாகவும் இருந்தது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு உயிரிழந்தவர்களின் அல்லது தங்கள் இணையரை பறிக்கொடுத்தவர்களின் சொந்தங்கள் பலரும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் அனைவருமே கண்கள் குளமாக அமர்ந்திருந்தனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரன் கலைச்செல்வன், விமலாதேவியின் கணவர் திலிப்குமார், மாரிமுத்துவின் மனைவி அபிராமி, நந்தினியின் தாயார் ராஜகிளி, ஐஸ்வர்யாவின் தந்தை தங்கவேலு ஆகி யோர் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்கள் அனைவரையும் ஒரு சேர காணும்போது நம்மால் உணர்ச்சிவசப்படா மல் இருக்க முடியவில்லை. 2015 ஜூன் மாதம்தான் கோகுல்ராஜ் படு கொலை சம்பவம் நடந்த காலம். தீரன் சின்ன மலை பேரவை என்கிற சாதி அமைப்பு தான் கோகுல்ராஜை கடத்தி படுகொலையை அரங்கேற்றியது. தனது கல்லூரி மாணவி யோடு கோகுல்ராஜ் திருச்செங்கோடில் உரை யாடிக் கொண்டிருந்தபோதுதான் கடத்தப் பட்டான். கொலைவெறியனும், சாதிய அமைப்பின் தலைவனுமான யுவராஜ் இந்த படுகொலைக்கு முன்பு சாதி வெறியை தூண்டும் ஏராளமான வாட்ஸ்சப் வீடியோக் களை வெளியிட்டான். கோகுல்ராஜின் படு கொலை ஏற்படுத்திய தாக்கத்தின் உந்து தலால்தான் நடைபயண இயக்கத்தை ஜூன் மாதம் நடத்துவது என்றும் அதையும் சேலத்தில் துவங்குவது என்றும் தீர்மானித் தோம். துவக்க நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பி.சம்பத் நடைபயண இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறு வனர் தொல். திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்தியாவின் பல  பகுதிகளில் நடைபெற்ற சாதி ஆணவப் படு கொலைகளையும், அதனால் பல குடும்பங்கள் சந்திக்க நேர்ந்த துயரங்களையும் அவர் எடுத்துச் சொன்ன போது ஒட்டுமொத்தக் கூட்ட மும் உணர்ச்சி வசப்பட்டது. வழியெங்கும் இந்த நடைபயணத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும் என அவர் அறிவித்தபோது, கரவொலி அதிர்வலையாய் எழுந்தது. இவை வெறும் வார்த்தைகள் அல்ல, நடைமுறை யில் வழியெங்கும் அத்தகைய வரவேற்பு களை எதிர்கொண்டோம். ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ்  கட்சி, அருந்ததியர் பெண்கள் விடுதலை இயக்கம், ரீடு போன்ற அமைப்புகளும் தங்கள்  அணிகளோடு துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற னர். பயணம் முழுவதும் இல்லாவிட்டாலும் பி. சம்பத் பல நாட்கள் நடைபயண நிகழ்வில் பங்கேற்றார். இன்சூரன்ஸ் அரங்க தோழர்கள் கே.சுவாமிநாதன் தலைமையில் சீருடைகளுடன் பெருந்திரளாக துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தோழர் சுவாமி நாதன் துவக்கம் முதல் இறுதி வரை நடை பயண இயக்கத்தில் பங்கேற்றதானது வழி யெங்கும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் பரவலாக பங்கேற்க உதவியது. நடைபயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக யு.கே.சிவஞானம் சிறப்பாக செயல்பட்டார். கு.ஜக்கையன் (ஆதி தமிழர் கட்சி), பேரா.அருணன் (மக்கள் ஒற்றுமை மேடை), மதுக்கூர் ராமலிங்கம் (தமுஎகச), சுகந்தி (மாதர் சங்கம்), கண்ணன் (சிஐடியு), பாலா (வாலிபர் சங்கம்) உட்பட பல தலைவர்கள் நடைபயண நிகழ்வில் ஆங்காங்கு பங்கேற்றனர். சேலத்தில் துவங்கிய நடைபயணம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைந்தது. வழியெங்கும் கொடுத்த வரவேற்புகளை வெறும் வார்த்தை களால் வர்ணிக்க முடியாது. ஒதுக்குப்புற மான சேரிகள் மட்டுமல்ல, மையமான ஊரின் பகுதிகள், நகரங்களின் பிரதான வீதிகள் என பல பகுதிகளையும் கடந்து சென்றது நடை பயணக்குழு. ஆங்காங்கு கிடைத்த வரவேற்பு கள் எழுச்சியும் உணர்ச்சியும் கலந்ததாக அமைந்தன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சாதி, மதம் கடந்து பலதரப்பட்ட மக்களும் பங்கேற்ற னர்.

பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவர் மற்றொருவருடன் தொலைபேசியில் உரை யாடியபோது கூறிய வார்த்தைகளை இன்றைக் கும் மறக்க முடியவில்லை. “இவங்க எல்லாச் சாதியையும் ஒன்னாச் சேர்த்து ஒரே சாதியாகனும்னு பேசுறாங்க, ரொம்ப நல்லக் கருத்துக்களை சொல்றாங்க” என்றார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தால் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதையும், அதனால் சாதி இந்து குடும்பத்தைச் சார்ந்த இளம்பெண் அடைந்த மன வேதனை களையும் குறிப்பிட்டு பிரச்சார மேடையில் பேசுவதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் பையில் இருந்த பணத்தையெல்லாம் கையில் எடுத்து மேடைக்கு வந்து பயணக் குழு நிதியாக வழங்கிவிட்டு போனார். பல பிரச்சாரக் கூட்டங்களில் சாதி கொடுமை களை பற்றி உரையாற்றும்போது கூடியிருந்த பலரும் உணர்ச்சிமயமானதை காண முடிந்தது. மொத்தத்தில் இந்த பிரச்சார இயக்கம் வழியெங்கும் சாதாரண மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கருத்தோட்டத்தை வலுப்படுத்தியது. வரவேற்பு நடந்த பல்வேறு இடங்களில் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் மாநில மாவட்ட தலைவர்கள் வருகை தந்து  வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிங்கப்பெரு மாள் கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பங்கேற்று பயணக்குழுவை வாழ்த்தினார். அடுத்து, சென்னையில் இந்த நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சென்னைக்கு 100 கிலோ மீட்டர் முன்பு நடந்த பிரச்சாரத்தின்போதே வெளிப்பட்டது. காவல்துறையின் தடையை  ஏற்க முடியாது என பிரச்சாரக் கூட்டத்திலேயே  பிரகடனப்படுத்தினார் கே.சாமுவேல்ராஜ். சென்னையில் தடை என்ற செய்தியை அடுத்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்களை பி.சம்பத் சந்தித்தார். இருவரும் காவல்துறையின் சென்னை மாநகர ஆணையாளரை நேரடியாக சந்தித்தனர்.

நடைபயண இயக்கத்தை சென்னை நகருக்குள் அனுமதிக்குமாறு வற்புறுத்தினர். மாநகர ஆணையாளரோ “இது நீதிமன்ற உத்தரவு, நாங்கள் என்ன  செய்ய முடியும்” என வினவினார். சென்னை  மாநகரில் வேண்டுதலுக்காக மேல்மருவத்தூர் நோக்கி பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் சென்னை மாநகர வீதிகளில் தினசரி நடைபயணமாக செல்வதை எடுத்துச் சொல்லி அநீதிக்கு எதிராக நாங்கள் நடை பயணம் செல்லக்கூடாதா? எங்கள் நடை பயணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த உதவும் என வாதாடினோம். புன்னகையுடன் இந்த உரையாடலை கேட்டுக் கொண்ட  மாநகர ஆணையாளர் உதவி ஆணையா ளரை நோக்கி “சென்னை தாம்பரத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்த இவர்களை அனுமதியுங்கள்” என அறிவுறுத்தினார். அவரும் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் சென்னை மாநகரத்திற்குள் நடைபயணக்குழு நுழையவும், முக்கியமான பகுதியான தாம்பரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவும் அனுமதி கிடைத்தது. இச்செய்தி நமது அணிகளை உற்சா கப்படுத்தியது. நடைபயண இயக்கத்திற்கு கிடைத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இது. சென்னை மாநகருக்குள் நுழைந்த நடை பயணக்குழுவிற்கு தென்சென்னை மாவட்டக் குழு சார்பாக தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடை பயணமாகவே பயணக்குழுவினர் தாம்பரம் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தனர். எழுச்சிமிக்க பொதுக்கூட்டம் அது. தென் சென்னை மட்டுமல்ல, வடசென்னையிலி ருந்தும் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்பு களிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா, முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், பி.சம்பத், கே.சாமு வேல்ராஜ், எஸ்.கே.மகேந்திரன் உட்பட பலரும் உரையாற்றினர். இதனால் மட்டும் திருப்தியடையாத பயணக்குழுவினர் நமது நடைபயணத்தை சென்னை மாநகரத்தின் பரவலான உட்புற பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்பினர். இதற்காக தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தலைமையில் அணிதிரண்டனர். இறுதிநாள் நிகழ்ச்சி என்பதால் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர். நடைபயணக்குழு புறப்பட தயாரானபோது காவல்துறையினர் ‘இதற்குமேல் அனுமதிக்க முடியாது’ என நிலையெடுத்தனர். காவல் துறையினருக்கும் அணிகளுக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதி யில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த தள்ளுமுள்ளுவும், கைது நடவடிக்கையும் இறுதிநாள் போராட்டத்தை எழுச்சிகரமாக மாற்றியது. காலையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில்தான் விடுவிக்கப்பட் டனர். காவல்துறையின் பாதுகாப்போடு நடை பயண இயக்கத்தின் இறுதிநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பல தலைவர்களும் உரையாற்றினர். நடை பயண இயக்கத்தில் முழுமையாக கலந்து கொண்ட தோழர்களுக்கு சிறப்பான பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் ஜூன் 9 சேலத்தில் துவங்கி ஜூன் 23 சென்னை வரை நடைபெற்ற சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான நடைபயண இயக்கம் தமிழக சமூக நீதி போராட்ட வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது ஒன்றும் மிகையானது அல்ல.