tamilnadu

புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் புகாரளிக்க தொடர்பு எண் வெளியீடு

சென்னை, அக்.17- பெருநகர சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய  சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது பழைய சாலைகளை அகழ்ந் தெடுக்காமல் புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் புகாரளிக்க தொடர்பு எண் வெளியீடப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- ‘’பெருநகர சென்னை மாநகராட்சி யால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்கு வரத்து சாலைகளும், 5270 கி.மீ. நீள முள்ள 34640 உட்புறச் சாலைகளும் பரா மரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலை களில் நாள்தோறும் தூய்மைப் பணி யாளர்கள் மூலம் துப்புரவு பணிகள்  மற்றும் சேதமடைந்த சாலைகளைக் கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல்  போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சி யின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.  பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்ல பாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பார்வையிட்டு பணிகளை  விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும், சாலைப் பணிகளை மேற்கொள் ளும்போது பழைய சாலைகளை முழு வதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலைப்  பணிகளை மேற்கொள்ள அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் சாலை உயரமாவது தடுக்கப்படுகிறது. மேலும், சாலையோரமுள்ள குடி யிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ  மழைக் காலங்களில் நீர் புகாமல் தடுக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளை அகழ்ந்  தெடுக்காமல் புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் 1913 என்ற புகார் எண்  ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;