tamilnadu

img

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனர்களின் எதிர்ப்பும்

யூதர்களின் நாடு என இஸ் ரேல், 1948-ல் பாலஸ் தீனத்தின் பகுதிகளை கைப்பற்றி உருவாக்கப்பட்டது. மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் போன்ற பகுதி களில் பாலஸ்தீனர் வாழ்கின்றனர். லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே யே வாழ்கின்றனர். 1967-ல் இருந்த எல்லைகளின் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீனம் அமை போராடி வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆதர வாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செயல்படுகிறது. தற்போது 7000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் கைதிகளாக உள்ளனர். சட்ட விரோத அத்துமீறல் நடவடிக்கைகள் இவை. இஸ்ரேலிய அடக்குமுறைகளுக்கு அஞ்சாது பாலஸ்தீனர் உரிமைக்காக பலர் சிறையில் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தி வருகின்றனர். ஹிசாம் (Hisham) அபு ஹமாஸ் என்பவர் 140 நாட்களாக தொடர்ந்து கால வரையற்ற உண்ணாவிரத போராட் டத்தில் உள்ளார்.

இவரது தைரியம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எவ்வித விசாரணையுமின்றி சிறை களில் வாடும் பாலஸ்தீனர் குறித்து ஊடகங்களில் மிகவும் அபூர்வமா கவே விவாதிக்கப்படுகிறது. ஹிசாம் அபு ஹமாஸின் உண்ணாவிரத போராட்டம், பாலஸ்தீனர்களின் உணர்வுகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரி வித்து வரும் சக்திகளுக்கும் உத் வேகம் ஊட்டி வருகிறது. 2009, 2014 போல் 2021-லும் பாலஸ் தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பா ளர்களின் கொடூர அடக்குமுறை களை சந்தித்தனர். மிகவும் குறிப்பி டத்தக்கது, 2021 மே மாதம் 11 நாட்கள் தொடர்ந்து இஸ்ரேல், பாலஸ்தீனர் வாழும் காசா பகுதியில் குண்டு வீதி தாக்குதலை நடத்தியது. 260 பாலஸ்தீ னர் கொல்லப்பட்டனர். 2200 பேருக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். ஆனா லும் குண்டு வீச்சுக்கு முன்னாலும், குண்டு வீச்சின் போதும் பாலஸ்தீ னர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. மே 18-ல் தேசிய வேலைநிறுத்தமும் நடத்தப் பட்டது. பாலஸ்தீனர்களின் புனித ஸ்தல மான அல் அக்சா மசூதியில் இஸ்ரே லிய குடியேறிகள் அத்துமீறி நுழைந்த னர். ஷேக் ஜராலிலும், அல் அக்சா மசூதியை சுற்றியும் உள்ள பகுதி களில் பாலஸ்தீனர் குடும்பங்கள் அகற்றப்பட்டன. பாலஸ்தீனியர் இதற்கு எதிராக போராடுகின்றனர்.

6 பாலஸ்தீன கைதிகள் அதிசயமான முறையில் சிறைகளிலிருந்து தப்பி வெளியேறினர். ஆனால் சில வாரங்க ளுக்குப் பின்னர் அவர்கள் பிடிபட்ட னர். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக் காக குரல் கொடுக்கும் 6 பாலஸ்தீ னிய அமைப்புகளை இஸ்ரேல் தடை செய்தது. காலிதா ஜெரா என்ற பாலஸ்தீனிய கைதி தனது இறந்த  மகளை பார்க்கக்கூட விடுவிக்கப் படவில்லை. காலாவதியான கொரோனா தடுப்பூசிகளே பாலஸ்தீ னர்களுக்கு கிடைத்தது. இஸ்ரேலிலும், அமெரிக்கா விலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந் துள்ள போதிலும், பாலஸ்தீனர் விரோத இஸ்ரேல் அரசின் கொள்கை கள் மாறவில்லை. பல பத்தாண்டுகள் இஸ்ரேலின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு தீரமுடன் போராடி வரும் பாலஸ்தீ னர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நாமும் நமது நேசக் கரத்தை நீட்டுவோம். இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான உலக கண்டனக்குரல் போதாது. முதலாளித் துவ உலகம் நீசத்தனமான மவுனம் சாதிக்கிறது.