இஸ்ரேல்-ஈரான் மோதல் : 100 பேர் பலி மூன்றாவது நாளாக வான்வெளி மூடல் முடங்கியது விமானப் போக்குவரத்து
டெஹ்ரான், ஜூன் 15 - இஸ்ரேல்-ஈரான் இடையேயான ராணுவ மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். மூன்று நாட்களாக தொடரும் இந்த தாக்குதல்களால் இருநாட்டு வான்வெளியும் மூடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் வெள்ளிக்கிழமை “ஆபரேஷன் லயன் ரைசிங்” பெயரில் இஸ்ரேல் ராணுவம் தெஹ்ரானில் உள்ள அணு ஆயுத தளங்கள், ஏவுகணை ஆலை களை தாக்கியது. இதில் ஈரான் புரட்சி கர காவல்படையின் தலைவர் ஜென ரல் ஹொசைன் சலாமி, ஆயுதப் படை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி உட்பட 78 பேர் கொல்லப் பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் பதிலடி
ஈரான் உயர்மதத் தலைவர் அயத்துல்லா அலி கோமெனி “கடு மையான பதிலடி கொடுக்கப்படும்” என அறிவித்த பின், ஈரான் ராணுவம் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 100 டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது. இஸ்ரேலின் “அயர்ன் டோம்” பாதுகாப்பு அமைப்பை உடைத்துக்கொண்டு சில ஏவுகணை கள் டெல் அவிவ், ஹைபா நகரங் களை தாக்கின. இதில் 3 இஸ்ரேலி யர்கள் பலி, 30 பேர் காயம்.
பலி எண்ணிக்கை உயர்வு
சனிக்கிழமை இரவு ஈரான் தாக்கு தலில் மேலும் 10 இஸ்ரேலியர்கள் பலி யாகினர். மொத்தம் 13 பேர் பலி, 50 பேர் காயம். ஈரான் தரப்பில் 88 பேர் பலி, 400 பேர் காயம். இஸ் ரேல் தாக்குதலில் தெஹ்ரானில் 2 எண்ணெய் கிணறுகள் வெடித்து 6 மணிநேரம் எரிந்தன. ஞாயிற்றுக் கிழமை 80 இலக்குகளை தாக்கிய தாக இஸ்ரேல் அறிவித்தது.
மிரட்டல் போர்
இஸ்ரேல் கர்னல் அவிச்சே அத்ரே ஈரான் குடிமக்களை ஆயுத தொழிற் சாலைகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார். “உடனடியாக வெளியேறுங்கள். இல்லையேல் உயிருக்கு ஆபத்து” என மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி பதிலளித்து, “தெற்கு பார்ஸ் எரிவாயு நிலை யத்தை டிரோன் தாக்குதல் நடத்தியது போரை விரிவுபடுத்தும் முயற்சி. எந்த தாக்குதலுக்கும் பின்வாங்க மாட்டோம்” என எச்சரித்துள்ளார்.
வான்வெளி மூடல் தாக்கம்
மூன்றாவது நாளாக இருநாட்டு வான்வெளி மூடப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் கிழக்கு-மேற்கு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சகம் “பாதுகாப்பு காரணங் களுக்காக வான்வெளி சிவில் விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.
‘அயர்ன் டோம்’ தோல்வி
இஸ்ரேலின் “அயர்ன் டோம்” உல கின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பு என மேற்கத்திய ஊடகங்கள் பெரு மையாக கூறி வந்தன. ஆனால் ஈரான் ஏவுகணைகளில் 30 சதவீதம் இந்த அமைப்பை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தி யுள்ளது. ஈரான் சிறப்பு வியூகம் கை யாண்டதால் ஏவுகணைகள் தப்பித்த தாக அமெரிக்க-இஸ்ரேல் ஊட கங்கள் விளக்கம் அளித்துள்ளன.