பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்
தருமபுரி, ஜூன் 9 – பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து, தரு மபுரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிது. பல்லாயி ரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரே லின் தாக்குதலில் பலியாகிக்கொண் டுள்ளனர். போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டு இருக்கிறது. இதில், குழந்தைகள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பலி யாகிக்கொண்டுள்ளனர். இந்த போர் வெறியை ஆதரிக்கும் அமேரிக்கா உள் ளிட்ட நாடுகளை கண்டித்தும் சிபிஎம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, ஆர்.மல்லிகா மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், என்.கந்தசாமி, எஸ்.கிரைஸாமேரி மற் றும் தமிழ்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.