tamilnadu

img

விண்வெளியில் சிக்கிக்கொண்டாரா சுனிதா?

ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட போது பேரி வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் பணி எளிமையானதாக தான் இருந்தது. போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தை முதன் முறையாக ஓட்டி சோதனை செய்வது தான் அவர்கள் பணி. பூமியிலிருந்து ஏவூர்தி ஸ்டார்லைனர் விண்கலத்தை விண்ணில் செலுத்தும். விண்ணுக்குச் சென்றதும் தானியங்கி அமைப்பை முடக்கி இருவரும் ஓட்ட வேண்டும். சோதனை செய்ய வேண்டும். செயல்திறனை ஆய்வு செய்யவேண்டும். எல்லா கருவிகளும் சரியாக செயல்படுகிறதா என சோதித்து அறிய வேண்டும். பின்னர் பூமிக்கு ஐநூறு கிமீ உயரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) சென்று சேரவேண்டும். அங்கே சில நாட்கள் தங்கி அஹே விண்கலத்தில் ஏறி அமர்ந்து எட்டு நாளில் பூமிக்கு திரும்பவேண்டும். எட்டு நாளில் திரும்ப இருந்த அவர்களது திட்டம் இப்போது  தொலைக்காட்சி தொடர்போல எட்டுமாதம் என நீட்சி பெற்றுள்ளது. வரும் 2025 பிப்ரவரி மாதத்தில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. 

த.வி.வெங்கடேஸ்வரன்

மூத்த விஞ்ஞானி

விண்வெளி நிலையம் நோக்கிய பயணம்

பூமியிலிருந்து சுமார் நான்கு முதல் ஆறு மணிநேரத்தில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண் குடிலை அடைந்து விட முடியும் என்றாலும் சோதனையோட்டம் என்பதால்  வேண்டுமென்றே இருபத்திஐந்து மணிநேரம் எடுத்துக்கொண்  டார்கள்.  பொதுவாகத் தானியங்கி முறையில் விண்வெளியில்  சென்று தானே விண் குடிலை அடையும் திறன் கொண்டது என்றா லும் தானியங்கி கணினியை முடக்கிவிட்டு கையால் கருவி களை இயக்கிச் சோதனை மேற்கொண்டார்கள். அதன் பின்னர்  ஜுன் ஆறாம் தேதி விண் குடிலை அடைந்தார்கள். சுமார் ஒருவாரம் தங்கி சோதனைகளை முடித்துக்கொண்டு  ஜூன் 14 ஆம் தேதி திரும்பவதாகத் திட்டம்.  திரும்பும் கலத்தை  இயக்கும் முன்னர் சோதனை மேற்கொண்டபோது அதில் உள்ள ஹீலியம் குடுவையில் கசிவு இனம் காணப்பட்டது; இதன்  தொடர்ச்சியாக விண்கலத்தின் சில உந்து ராக்கெட்கள் சரியாக  வேலை செய்யவில்லை. எனவே திரும்பும் திட்டம் ஜூன் 26 க்கு  ஒத்திவைக்கப்பட்டது.  இடைப்பட்ட காலத்தில் புதிய கோளாறு களையும் இனம் கண்டதன் விளைவாகத் தற்போது அந்த  விண்கலத்தை பயன்படுத்த வேண்டாம் என நாசா முடிவெடுத்  துள்ளது.

என்ன பழுது?

சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது வழியில் பாதையில் பெரிய குழி வருகிறது. ஹாண்டில் பாரை திருப்பி சைக்கிள் செல்லும் பாதையை மாற்றிச் செல்வோம். அதே போல விண்வெளியிலிருந்து விண்கலம் பூமியை  வந்தடையும் போது சரியான கோணத்தில் பூமியின் வளி மண்டலத்தில் நுழைய வேண்டும்.  ஸ்டார்லைனர் கலத்தை இயக்க அதில் பற்பல சிறுசிறு  உந்து ராக்கெட்கள்  விண்கலத்தில் உள்ளன.விண்கலத்தின்  சுற்றுப்பாதையை மாற்ற, அதன் நோக்கு திசை, தன்னைத்  தானே சுழலும் வேகம் முதலியவற்றை கட்டுப்படுத்த பய ணக்குழு அமரும் கலத்தையும் எஞ்சின் எரிபொருள் முத லியவை அடங்கிய சேவை கலத்தையும் பிரிக்கவும் இருபது  சிறு ஏரோஜெட் ராக்கெட்டைன் எஞ்சின் உள்ளது. அதே போலச் சர்வதேச விண் குடிலிருந்து பிணைப்பை அறுத்துத் தள்ளித் தொலைவை அடைந்து பூமிக்கு திரும்பத் தேவையான உந்து விசை பெறவும் விண்கலத்தின் திசை பாதை முதலியவற்றை கட்டுப்படுத்தவும் 28 எதிர்வினை கட்டுப்பாட்டு உந்து ராக்கெட் உள்ளன. பார்வைக்கு தீபாவளி ராக்கெட் அளவைவிட சிறிதாக இருக்கும் இந்த நாற்பத்தியெட்டு உந்து ராக்கெட் தான்  விண்வெளிக்கு சென்றபின்னர் அதன் இலக்கான விண்  குடிலை அடையவும் பின்னர் பூமி திரும்பவும் தேவையான  உந்தம் தரும்.  இவை தான் ஹாண்டில் பார் போலவும் செயல்  படும். இந்த ராக்கெட்டில் தான் கோளாறு. 

ஹீலியம் கசிவு 

முதலில் B1A3 எனும் எதிர்வினை கட்டுப்பாட்டு உந்து ராக்கெட்டில் ஹீலியம் கசிந்து வருவதை கண்டனர். அதன்  பின்னர் மொத்தம் ஐந்து உந்து ராக்கெட்களில் ஹீலியம் கசிவு இனம் காணப்பட்டுள்ளது. பூமியில் கார், ஸ்கூட்டர் போன்றவற்றில் பெட்ரோல் டேங்கின் கீழே எஞ்சின் இருக்கும். ஈர்ப்பு விசை காரண மாக எரிபொருள் இரண்டையும் இணைக்கும் குழாய் வழி  எஞ்சினுக்கு வந்து சேரும். விண்வெளியில் இது சாத்தியம்  இல்லை. அங்கே ஈர்ப்பு விசை கொண்டு எரிபொருளை நகர்த்த  முடியாது. எனவே எரிபொருள் டேங்கின் மேல் உள்ள ஹீலி யம் குடுவையை பொருத்தி விடுவார்கள்.  குடுவையின் வாயைத் திறந்து விட்டால் ஹீலியம் வாயு புகுபுகுவென எரி பொருள் குடுவை உள்ளே புகும். ஹீலியம் புகுந்த அளவுக்கு  எரிபொருள் குழாய் வழியே என்ஜினை அடையும்.  இதன்  வழியே தேவையான இலக்கு உந்தம் பெற முடியும். ஹீலியம் கசிந்து விட்டால் அழுத்தம் குறையும்; எனவே  போதிய உந்தம் இருக்காது. இதுதான் சிக்கல். முதலில் கோளாறு இனம் காணப்பட்ட B1A3 உந்து ராக்கெட் இயக்கிய போது வெறும் பதினோரு சதவிகித விசையே உற்பத்தி ஆனது.  ஹாண்டில் பாரை திருப்ப முடியவில்லை ஏன்றால் சைக்கிள் ஓட்டுவது ஆபத்து அல்லவா?  அதுபோல இந்த சிறு  சிறு ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விண் கலத்தை சரியாக இயக்க முடியாது போகும் என நாசா அச்சப்படுகிறது; எனவே தான் இந்த விண்கலத்தை பயன்படுத்தி அவர்கள் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்கள்.

தனியாக இல்லை

சுனிதாவும் பேரியும் தவிர தற்போது எக்ஸ்பெடிஷன் 71 இன் ஒரு பகுதியாக ஒலெக் கொனோனென்கோ, நிகோலாய்  சப், டிரேசி கால்டுவெல்-டைசன், மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ், அலெக்சாண்டர் கிரெபென்  கின் ஆகிய ஏழு பேர் சர்வதேச விண்வெளிக் குடிலில் வசித்து  ஆய்வு செய்து வருகின்றார்கள். எனவே இவர்கள் தனித்து  விண்வெளியில் கைவிடப்படவில்லை.  ஒலெக் கொனோனென்கோ, நிகோலாய் சப் ஆகியோரின்  எக்ஸ்பெடிஷன் 70 இன் ஒரு பகுதியாக சோயூஸ் MS-24 விண்  கலத்தில் ISS ஐ அடைந்தனர். பின்னர் எக்ஸ்பெடிஷன் 71 இல் இணைந்து கொண்டனர். டிரேசி கால்டுவெல்-டைசன் மார்ச் 25, 2024 அன்று சோயூஸ் MS-25 கலத்தில் ISS குழுவில்  சேர்ந்தார். மூன்று பேரும் செப்டம்பர் 24, 2024 அன்று சோயூஸ் MS-25  கலத்தில் அமர்ந்து பூமிக்குத் திரும்பு வார்கள்.  மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ், அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய நால்வரும் மார்ச் 5, 2024 அன்று டிராகன் எண்டெவர் எனும் ஸ்பேஸ்எக்ஸ் SpaceX Crew-8 விண்கலத்தில் எக்ஸ்பெடிஷன் 71 இன் பகுதியாக ISSக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் நால்வரும் வரும் செப்டம்பர் 2024 இல் அதே விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.  எக்ஸ்பெடிஷன் 71 பயணத்தை முடித்துக்கொண்டு அவர்கள் ஏழு பெரும் திரும்பத் தயார் ஆகும்போது பூமியிலி ருந்து இரண்டு விண்கலங்கள் ISS நோக்கி செல்லும். எக்ஸ்பெடிஷன் 72 இன் குழு இதில் பயணம் செய்வார்கள்.  மூன்று (இரண்டு ரஷ்யர் மற்றும் ஒரு அமெரிக்கர்) ரஷ்யா வின் சோயுஸ் MS -26 மூலம் செல்வார்கள். இரண்டு உறுப்பி னர்கள் (ஒரு அமெரிக்கர் ஒரு ரஷ்யர்) ஸ்பேஸ்எக்ஸின் எண்டூரன்ஸ் விண்கலம் மூலம் செல்வார்கள். பொதுவாக இதில் நான்கு பேர் செல்ல வேண்டும்; ஆனால் இந்த தடவை  மட்டும் இரண்டு இருக்கைகள் காலியாக விண்வெளி நோக்கி  பயணம் செய்யும். அதாவது ஐந்து பேர் மட்டும் செப்டம்பர்  24, 2024 அன்று எக்ஸ்பெடிஷன் 72 குழுவாக பயணம் செய்வார்கள். இந்த ஐந்து பேருடன் ஏற்கனவே விண்வெளி யில் உள்ள பேரி வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் சேர்ந்து  கொள்வார்கள்.   அதாவது மொத்தம் ஏழு பேர் கொண்ட எக்ஸ்பெடிஷன் 72 குழு செப்டம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை  பணி மேற்கொள்வார்கள். பின்னர் சோயுஸ் MS -26, ஸ்பேஸ்எக்ஸின் எண்டூரன்ஸ் ஆகிய இரண்டு கலங்கள் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். 

தேவைப் பொருட்கள்

விண்வெளியில் உணவு வேண்டும்; நீர் வேண்டும்; ஆக்சிஜன் வேண்டும். இப்படி தேவை பொருள்களுக்கு தட்டுப்பாடு வருமா?  ISS இல் ஏராளமான உணவு மற்றும் பிற பொருட்கள் இருப்பு உள்ளன.  சமீபத்தில் தான் பொருள்களை பூமி யிலிருந்து அனுப்பினார்கள். கடந்த ஆகஸ்ட் 14 அன்று, கஜகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து ப்ராக்ரஸ் MS-28 (ப்ரோக்ரஸ் 89P என்றும் அழைக்  கப்படுகிறது) சரக்கு விண்கலம் ஏவப்பட்டது. இந்த ஆளில்லா  சரக்கு விண்கலம் சுமார் மூன்று டன் உணவு, உடைகள், எரிபொருள், மருத்துவ பொருள்கள், மருந்து அறிவியல் உபகரணங்களை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. இதில் 950 கிலோகிராம் எரிபொருள், 420 கிலோ கிராம் நீர், மற்றும் 50 கிலோகிராம் நைட்ரஜன் ஆகியவை அடங்கும்.  விண்கலத்தில் ஆகிச்ஜன் பெரும் பிரச்சினையே இல்லை.  மூச்சு விடும்போது வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சை டில் இருந்து கிட்டத்தட்ட 50% ஆக்ஸிஜன் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்யப்படு கிறது. சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் கூடுதல் ஆக்ஸி ஜன் தயாரிக்கப்படுகிறது. முக்கிய சவாலாக இருப்பது வாசனை- குறிப்பாக துர்நாற்றம்.  மனித உடல் தானாக பல்வேறு துர்நாற்ற வாயுக்களை வெளியிடும். அடைப்பாக உள்ள விண்வெளி நிலையத்தில் காற்றில் இந்த துர்நாற்ற வாயு பரவி காலப்போக்கில் மூச்சு விடமுடியாத படி ஆகிவிடும். எனவே அவ்வப்போது காற்றை புதுப்பிக்க வேண்டும். தூய ஆக்சிஜனை நம்மால்  சுவாசிக்க முடியாது; தூய ஆக்ஸிஜன் விஷம்! எனவே ஆக்சி ஜனை நைட்ரஜனுடன் கலந்து விண்வெளி நிலையத்தில் காற்றை தயாரிப்பார்கள். பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் நைட்ரஜன் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனுடன் கலந்து புதிய காற்றை உருவாக்கி அவ் வப்போது புதுப்பிப்பார்கள்.  அதற்கு முன்பு ஆகஸ்ட் 4 அன்று, சிக்னஸ் NG-21  எனும்  அமெரிக்க சரக்கு விண்கலம் 3,857 கிலோகிராம் சரக்கு மற்றும்  பொருட்களை ISS க்கு எடுத்து சென்றது.

 1,021 கிலோ உணவு  மற்றும் உடைகள், 1,220 கிலோ அறிவியல் உபகரணங்கள், 43 கிலோ விண்வெளி நடை உபகரணங்கள், 1,560 கிலோ ISS பழுது மற்றும் பராமரிப்புக்கான வன்பொருள் மற்றும்  13 கிலோ கணினி வளங்கள் ஆகியவை இதில் அடங்கும்.  இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சரக்கு விண்கலம் தேவையான பொருள்களை ஏற்றி செல்லும். எனவே அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏதுமில்லை. உடை  விண்வெளி நிலையத்தில் சலவை வசதி இல்லை. எனவே  தூய உடை தான் பெரும் சிக்கல்.  விண்வெளி நிலையத்திற்குள் 22 முதல் 25 டிகிரி செல்சி யஸ் வரை பராமரிக்கப்படும் வெப்பநிலையில் அதிக வியர்வை உற்பத்தியாவதில்லை.  மேலும் தூசி எதுவும் இருக்காது. இதனால், வாரக்கணக்கில் அணிந்தாலும் ஆடை கள் அழுக்காகாது. எனவே, ஐ.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் ஆடைகளை அகற்றுவதற்கு முன்பு பல நாட்க ளுக்கு அணிவார்கள். அணிந்த ஆடையை குப்பையில் வீசி  விடுவார்கள்.  உடற்பயிற்சி உடை வாரந்தோறும் மாற்றப்படுகிறது, சில  நாட்களுக்கு ஒருமுறை உள் ஆடையை கழற்றி வீசிவிடு வார்கள். புதிய உள்ளாடை அணிவார்கள். சட்டைகள், டாப்ஸ்,  பேன்ட் மற்றும் கால்சட்டை ஒரு வாரம் அணிவார்கள்.  குப்பை யாக வீசப்பட்ட ஆடைகள் சரக்குக் கலம், விண்வெளி நிலை யத்தில் உருவாகும் ஏனைய குப்பைகளுடன் சேமித்து வைக்  கப்படும்.  புதிய சரக்கு கலம் கப்பல் வரும்போது,  பழைய  சரக்குக் கலம் பிரிக்கப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைகிறது, காற்று உராய்வில் வெப்பம் அடைந்து  பாதுகாப்பாக எரிகிறது. கடந்த சரக்கு கலங்களில் பாரி மற்றும் சுனிதாவிற்கு தேவையான மாற்று ஆடைகளை அனுப்பியுள்ளனர். 

இட நெருக்கடி

ஏழு பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒன்பது பேர் உள்ள னரே; இட நெருக்கடி ஏற்படுமா? சர்வதேச விண்வெளி நிலை யம் (ISS) ஆறு படுக்கையறைகள் கொண்ட தோட்ட வீடு அள வுக்கு பெரியது, ஆனால் அது ஏழு நிரந்தர உறங்கும் படுக்கை கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கூடு தல் உறுப்பினர்கள் வரும்போது, அனைவருக்கும் போது மான படுக்கைகள் இருக்காது. இது புதிய பிரச்சனை அல்ல; ஒவ்வொரு முறையும் குழு  சுழற்சியின் போது சில நாட்கள் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள்.  ஒருமுறை அதிக பட்சமாக 2009 இல், 13 உறுப்பினர்கள் நிலையத்தில் இருந்த னர்.  விண்வெளி நிலையத்தின்  தளம், சுவர் அல்லது கூரை  போன்ற எந்த மேற்பரப்பிலும் தூங்குவதற்கான படுக்கை பையை இணைத்தால் போதும். கட்டில்படுப்பது போல படுத்தால் விண்வெளியில் எடை இல்லை என்பதால் தூக்கத்  தில் மிதந்து எங்கோ சென்று விடுவோம். எனவே தான் படுக்கை மேலே பை  போன்ற உறை இருக்கும். உள்ளே நுழைந்து  

ஜிப் போட்டு மூடிக் கொள்ளவேண்டும். இதே படுக்கை பையை எங்கு வேண்டுமென்றாலும் பிணைத்து கூடுதல் உறங்கும் இடத்தை உருவாக்கிக்கொள்ளலாம். எனவே தூக்கம் ஒரு பிரச்னை இல்லை.  மேலும் விண்வெளி நிலையத்தில் 11 பேர் கொண்ட குழு வினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூன்று கமோட்கள்  உள்ளன. விண்வெளியில் ஷவர் அல்லது பக்கட்டில் நீரை  நிரப்பி தலையில் ஊற்றிக் குளிக்க முடியாது. நீரை ஊற்றி னால் அது பந்து போல திரண்டு மிதக்கும். எனவே ஸ்பாஞ்ச்  போன்ற பொருளை கொண்டு உடலை தேய்த்து சுத்தம்  செய்து கொள்வார்கள். உடலை சுத்தமாகவும், சுகாதாரமாக வும் வைத்திருக்க, சிறப்பு துடைப்பான்களை தான் பயன் படுத்துவார்கள்.  உடற்பயிற்சி இயந்திரத்தை பயன்படுத்துவது தான் கூடு தல் நபர்கள் இருக்கும்போது பிரச்சனை. விண்வெளியில் எடை அற்ற நிலையில் மிதந்தபடி வாழும்போது தசை மற்றும்  எலும்பு வலுவிழக்கும். இதுபோல விண்வெளி சார்ந்த சில சிக்கல்கள் உள்ளன. எனவே கறாராக தினமும் குறிப்  பிட்ட அளவு உடற்பயிற்சி செய்வது அவசியம். கூடுதல்  நபர்கள் இருக்கும்போது ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி செய்ய கால அட்டவணை தயாரித்து தருவது தான் பெரும்  சவால். 

இது முதல் தடவை அல்ல

திட்டமிட்டதை விட கூடுதல் காலம் விண்வெளி நிலை யத்தில்தங்குவது இது முதல் முறை அல்ல.  வானிலை பதிப்பு போன்றவை காரணமாக பூமிக்கு திரும்புவது சில நாட்கள் தாமதம் அடைவது ஒன்றும் புதிதல்ல. எனினும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முன்பும் சில மாதங்கள் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  1979 ஆம் ஆண்டில், விண்வெளி வீரர்களான விளாடிமிர்  லியாகோவ், வலேரி ரியுமின் ஆகியோர் சோவியத் விண் வெளி நிலையமான சல்யூட்டில் தங்கியிருந்தனர். மாற்றுக் குழுவினரின் விண்கலத்தில் கோளாறு காரணமாக பூமிக்கே திரும்பி விட்டனர். லியாகோவ், ரியுமின் வந்த சோயூஸ் கலத்திலும் பழுது இருக்கலாம் என அஞ்சி, தரைக் கட்டுப்பாட்டாளர்கள் அதனை திரும்ப அழைத்துக் கொண்டு விட்டனர். மாற்றுக் கலம் வந்து தான் பூமி திரும்பி னர். இதன் காரணமாக அவர்கள் விண்வெளி நிலை யத்தில் தங்கும் காலத்தை 108 நாட்களில் இருந்து 175 நாட்க ளுக்கு நீட்டிக்க வேண்டியிருந்தது.  செர்ஜி கிரிகலேவ், அலெக்சாண்டர் வோல்கோவ் ஆகி யோருக்கு ஏற்பட்ட சிக்கல் சோகமானது.  மே 19, 1991 இல்  ஏவப்பட்ட சோயுஸ் டிஎம்-12 இல் சவாரி செய்து கிரி கலேவ்  மிர் எனும் சோவியத் விண்வெளி நிலையத்தை அடைந்தார். வோல்கோவ் அக்டோபர் 1991 இல் சோயுஸ் டிஎம்-13 மூலம் அவருடன் சேர்ந்தார். மிர் நிலையத்தில் இருந்த ஏனையோர் பூமிக்கு திரும்பியபோது அவர்கள் இருவரும் தங்கி அடுத்த குழு வரும் வரை மேற்பார்வை செய்ய முன்வந்தனர். அந்தோ பரிதாபம்.  இதற்கிடையில், சோவியத் யூனியன் அரசியல் குழப்பத்தில் மூழ்கியது. டிசம்பர் 26, 1991 சோவியத் யூனியன்  உடைந்தது.

இருவரும் சோவியத் குடிமக்களாக விண் வெளிக்குச் சென்று, ரஷ்ய குடிமக்களாக மார்ச் 25, 1992 அன்று பூமிக்குத் திரும்பினர். கிரிகலேவ் தொடர்ந்து 311 நாட்கள் விண்வெளியில் இருந்தார், இது அவரது திட்ட மிட்ட பணிக் காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.  அதன் பிறகும் அச்சம் அடையாமல் அவர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார் என்பது வேறு கதை.  2003 இல் கல்பனா சாவ்லா மற்றும் பிறரை ஏந்திச் சென்ற  கொலம்பியா விண்வெளி ஓடம் வரும் வழியில் வெடித்துச் சிதறியது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா விண்வெளி ஓடத்தை இயக்குவதை நிறுத்திக்கொண்டது. எனவே அப்போது ISS இல் தங்கியிருந்த ரஷ்யாவின் நிகோலாய்  புடாரின், அமெரிக்காவின்  கென் போவர்சோ, டான் பெட்டிட்  ஆகியோர்  கூடுதல் காலம் விண்வெளியில் தங்க வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மே 2003 இல், ரஷ்ய சோயுஸ் விண்கலம்  அவர்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப கொண்டு வந்தது.  2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ,  ரஷ்யாவின்  செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின்  ஆகியோரை ISS க்கு அழைத்துச் சென்ற சோயுஸ் விண்  கலத்தின் மீது ஒரு சிறிய விண்வெளிப் பாறை மோதியது. விண்கலத்தின் குளிரூட்டும் தொட்டியில் ஒரு பஞ்சர் ஏற்பட்டது, மேலும் வாயு வெளியேறியது. இதனால் கலம்  செயலிழந்து ஆபத்தானது. அவர்கள் திட்டமிட்ட 188 நாட்க ளுக்கு பதிலாக 371 நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டி யிருந்தது. மாற்று சோயுஸ் கலம் சென்று அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வந்தது. 

இனி என்ன?

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச  விண் குடிலில் பாதுகாப்பாக தான் உள்ளனர். பூமிக்குத் திரும்ப கொண்டுவர மாற்று வழியை நாசா செயல்படுத்த உள்ளது.   ஏற்கனவே போயிங் விமானங்களின் தரம் தொடர்ந்து மோசமடைந்து அடிக்கடி செயலிழப்பதாக இருபதுக்கும் மேற்பட்ட போயிங் பணியாளர்களே தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் போயிங் நிறுவனம் பெரும் விமர்சனங் களைச் சந்தித்து வருகிறது.   இந்த விண்கலத்தை விண்ணில் எவும்போதே ஹீலி யம் கசிவு இனம் காணப்பட்டுவிட்டது எனவும், தேவைக்கு  நூறு மடங்கு ஹீலியம் உள்ளது; எனவே கவலையில்லை யென இந்தப் பழுதை பொருட்படுத்தாமல் ஏவினார்கள் என்ற  உள் தகவல் கசிந்துள்ளது. இந்தப் பின்னணியில் போயிங் ஸ்டார்லைனரின் முதல் ஓட்டம் தோல்வியில் முடிந்தால் பெரும் அவமானம்; எதிர் கால வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.