tamilnadu

img

புத்தாண்டிற்கும் செக் மீண்டும் முடங்கிய ஐஆர்சிடிசி

அவசரகால பயணத்தை மேற் கொள்ளும் பயணிகளின் வச திக்காக ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல்முறையில் பய ணச்சீட்டு முன்பதிவு  செய்யும் முறை இந்திய ரயில்வேயில் உள்ளது. இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூல மாகவும் முன்பதிவு செய்ய முடியும்.  குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வ தற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி  மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், புத்தாண்டு நாளன்று பயணத்தை மேற்கொள்வதற்காக குளிர்சாதன வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. ஆனால் ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செல் போன் செயலிகள் செயலிழந்ததால் பய ணிகளால் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடங்க லா? என கேள்வி எழுப்பி பயணிகள் உட்பட ஒட்டுமொத்த தரப்பினரும் ஐஆர்சிடிசி நிர்வாகத்தையும், மோடி அரசையும் கண்டித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக் கள் மூலம் எண்ணெய் இல்லாமல் வறுத் தெடுத்து வருகின்றனர்.  டிசம்பர் மாதத்தில் ஐஆர்சிடிசி செயலி செயலிழப்பது இது மூன்றாவது முறை யாகும். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி வலைதளம் மற்றும் செல்போன் செயலி முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.