tamilnadu

img

சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளராக இரா.சிசுபாலன் தேர்வு

தருமபுரி, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளராக இரா.சிசுபாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாடு, பாலக் கோடு நந்தாஸ் மஹாலில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி ஆகி யோரது நினைவரங்கத்தில் டிச.13,14,15 ஆகிய தேதி களில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் கே.காளியப்பன் செங்கொடியை ஏற்றி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சி.நாகராசன் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார் வேலையறிக்கை யையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் வாழ்த்திப் பேசினார். புதிய மாவட்டக்குழு மாநாட்டில் 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக இரா.சிசுபாலன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஏ.குமார், எம்.மாரி முத்து, வி.மாதன், எம்.முத்து, சி.நாகராஜன், சோ.அருச்சு ணன், வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், ஜி.சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழு பொருளாளர் ஆ.சேகர் நன்றி கூறினார். தீர்மானங்கள் இம்மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். பென்னாகரம் வட்டம், ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு, மேட்டுக் கொட்டாய், வாரக் கொல்லை ஆகிய சாலை களை அமைக்கும் பணி களை தேவையற்ற விதி களை காரணம் காட்டி கால தாமதம் செய்து வரு கின்றனர். எனவே, தேவை யான அனுமதி வழங்கி மலைக்கிராம மக்களுக்கு சாலை வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ஒகே னக்கல் குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப்பணிகள் விரைந்து துவங்கி, முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.