tamilnadu

விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு- ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்

விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு- ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய அம்பாசமுத்திரம் ஏ.எஎஸ் பியாக இருந்த பல்வீர் சிங், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசார ணைக்காக அழைத்து வரப்பட்ட சில இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மாநில மனித உரிமை ஆணையமும் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.பாதிக்கப்பட்ட இளை ஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் மற்றும் காவல் ஆய்வாளர ராஜகுமாரி உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் பல்வீர் சிங்அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். சனிக்கிழமை நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடந்த விசார ணையின்போது பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வீர் சிங்குக்கு உத்தரவிட்டார். . கடந்த ஆண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.