tamilnadu

img

இனிவரும் காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் தஞ்சையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

தஞ்சாவூர், ஜன.11 - இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அமைக் கப்பட்டுள்ள 79 மையங்களில், ஒருங்கி ணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியிடங் களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தி வருகிறது.  தஞ்சாவூர் மகர்நோன்புச் சாவடியி லுள்ள, தனியார் பள்ளியில் நடைபெறும் இத்தேர்வைப் பார்வையிட்ட ஆணையத் தலைவர் கா. பாலச்சந்திரன் செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது: “இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள்  தமிழ் வழியில் நடத்தப்படும். தற்போது நடை பெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளி யிட்டபோது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகாததால், ஏற்கனவே உள்ள வழக்கம் போல தேர்வு நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வில் கொள்குறி வகை (அப்ஜக் டிவ் டைப்) தமிழில் இருக்கும். மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான (டிஸ்கிரிப்டிவ்) வினாத்தாள் இருக்கும். இதில் 40 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்தால் மட்டுமே மற்ற கேள்வி களுக்கான பதில்கள் திருத்தப்படும். குரூப்-4 தேர்விலும் 40-க்கும் அதிகமான  மதிப்பெண்களைப் பெற்றால் தான்  தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில்  தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை தகுதி  மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வ ளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதை யும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தேர்வா ணையம் செய்கிறது.”  இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.