tamilnadu

தமிழக பட்ஜெட் மார்ச் 18- இல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி

சென்னை,மார்ச் 8- தமிழக அரசின் பட்ஜெட் வருகிற  18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர்  மு.அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்து சட்டப்பேரவை செயலாளர் கி. சீனி வாசன் செவ்வாயன்று(மார்ச் 8) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம், இம்மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்றும் அதில்  2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “பட்ஜெட் கூட்டத் தொடர், வருகிற 18 ஆம் தேதி தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கும்” என்றார். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகித மில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படு கிறது என்றும் அவர் கூறினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு, கேள்வி நேரம் அனைத்துமே முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரி வித்தார். 2022-2023 ஆண்டுக்கான முன் பண மானியக் கோரிக்கை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும், பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். மானியக் கோரிக்கையை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.