ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தோ்வு
மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 8- ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக ளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வரு மாறு.ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலிஉள்ள பணியிடங்க ளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, கால்நடை உதவி மருத்துவர், நகர் மற்றும் ஊர மைப்புத் துறை உதவி இயக்குநர், புள்ளி யியல் துறை உதவி இயக்குநா் உட்பட 32 பதவிகளுக்கான 330 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்தில் மே 13 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை ‘யுபிஐ’ செயலி மூலம் செலுத்தலாம். ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவையாகும். எழுத்துத்தேர்வு தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். தேர்வர்களின் நலன் கருதி, முதல்முறையாக பாடத் திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை தேர்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.