tamilnadu

img

மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மே 4- தில்லியில் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த  வீரர்கள் மீதான தாக்கு தலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மே ளனத்தின் முன்னாள் தலை வர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரர்களும் வீராங் கனைகளும் தில்லி ஜந்தர்  மந்தரில் கடந்த 12 நாள்களாக  இரண்டாம் கட்ட போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதனன்று (மே3) இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல் துறை உடை அணிந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,“தங்கள் சாதனை களால் நாட்டிற்கே பெருமை  தேடித் தந்த நமது மற்போர்  வீரர்களுக்கு இழைக்கப் பட்டு வரும் பெரும் அநீதி யைக் கண்டு அதிர்ச்சியடை கிறோம். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.  பெண்களுக்கு அதிகார மளிப்பதைப் பற்றி நமது பிரதமர் தொடர்ந்து பிரசங் கம் செய்கிறார். ஆனால்  அவரது பொய் வாக்குறுதி களுக்கு முரணாக, கத்துவா,  உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல  வழக்குகளிலும் பாதிக்கப் பட்டோருக்குத் தொல்லை யளிப்பதும், குற்றம்சாட்டப் பட்டோரைப் பாதுகாப்ப துமே பா.ஜ.க.வின் அடை யாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.