tamilnadu

img

ரூ. 56,295 கோடி ஜிஎஸ்டி வசூல்

சென்னை,நவ.27- இந்த அக்டோபர் மாதம் வரைக்கும்  ரூபாய் 56,295 கோடி ஜிஎஸ்டி வசூலாகி யுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கி ணைந்த வணிக வரி அலுவலகத்தில், வணிகவரி இணை ஆணையர்களின் பணிகுறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்  பி.மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வணிகவரித் துறையில் சார்நிலை யில் உள்ள 1,000 பணியிடங்களின் பணி நிலையை தரம் உயர்த்த கொள்கை அளவில் அனுமதிக்கப் பட்டுள்ளது. துறையில் தற்போது 12 நிர்வாகக் கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிகவரித் துறையை மறுகட்டமைப்பு செய்யும் ஓர் அங்கமாக 7 புதிய வணிக வரி நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்க வும், 6 புதிய நுண்ணறிவுக் கோட்டங் கள் உருவாக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் வரை இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து  ரூ.56,295 கோடி ஜிஎஸ்டி வசூலாகி யுள்ளது.

இது 2020ஆம் ஆண்டு அக்டோ பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 26 விழுக்காடு 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பி டும்போது 3 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நுண்ணறிவுப் பிரிவு சுற்றும் படை அலுவலர்களால் 1,74,199 வாகனங்கள் மற்றும் 2,21,543 மின் வழிச்சீட்டுகள் தணிக்கை செய்யப் ்பட்டு, 3,256 குற்றங்கள் கண்டறியப் ்பட்டன. அதன்மீது வரி மற்றும் அபராதத்  தொகையாக ரூ. 17.64 கோடி வசூலிக்கப் ்பட்டுள்ளது. மேலும் 100 வாகனங்களும் வழங்கப்பட உள்ளன. நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் மேற்கொள்்ளப்பட்ட ஆய்வில் ரூ.25.99 கோடி அபராதத் தொகை வசூல் செய்யப் ்பட்டது. சிறு வணிகர்கள் நல வாரியத்்தில் சேருவதற்கான கட்டண விலக்கு, அடுத்த ஆண்டுமார்ச் வரை நீட்டிக்கப்்படுகிறது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

;