தஞ்சாவூர், ஜூலை 10 - தனியார் மருத்துவமனைகளி லும் விரைவில் இலவசமாக பூஸ்டர் ஊசி போடும் திட்டம் அமல்படுத்தப் படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகா மினை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. தமிழகத்தில் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 94.68 சதவீதம் பேரும், இரண்டாம் டோஸ் 85.47 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஒரு இயக்கமாக செயல்படுத்தியதன் விளைவாக இந்த அளவிற்கு தடுப்பூசி போடு பவர்களின் எண்ணிக்கை வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை முதல் டோஸ் 93.10 சதவீதம் பேரும், இரண்டாவது டோஸ் 87.10 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள னர். இதில், தமிழக அளவில் போடப்பட்ட இரண்டாம் டோஸ் சத வீதத்தை காட்டிலும், தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போதும் தொடங்கி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வரு கிறோம். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக 2,500 என்ற எண்ணிக்கை யில் இருந்து 2,700 என உயர்ந்த நிலையில், அது தற்போது நிலை யாக உள்ளது. தமிழகத்தில் தற் போது 21,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகப்பேறு காலத்தில் தொற்று ஏற்பட்டால் அவர்கள், சிறப்பு கவனம் எடுத்து கண்காணி க்கப்பட்டு வருகின்றனர். வேகமாக பரவும் தன்மை கொண்டாலும் உயிர் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவில் இல்லை. இதற்கு காரணம் தமிழ கத்தில் தடுப்பூசி போடப்பட்டதால் மக்களிடையே 88 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதுதான்.
தமிழகத்தில் இதுவரை 11,44,23,194 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே மெகா தடுப்பூசி முகாம் வாரந் தோறும் என 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு மாத காலங்களில், மாதத்திற்கு ஒரு முறை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 1,458 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. பக்ரீத் பண்டிகை என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்லாமி யர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுக்குரிய வர்கள், 15 முதல் 17 வயதுக்கு உள்ள வர்கள் என தடுப்பூசி செலுத்து வதில் தஞ்சை மாவட்டம் 100 சதவீதம் நிறைவு செய்துள்ளது. ஆர்டிபிசி ஆர் பரிசோதனையில் 10 சத வீதத்திற்கும் மேல் தொற்று கண்டறி யப்பட்டால் மட்டுமே ஊரடங்கு நட வடிக்கை என்பதை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதேபோல தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிரு ந்தால், ஊரடங்கு குறித்து பரி சீலனை செய்யப்படும். ஆனால் இன்றைக்கு தமிழக முழுவதும் 5 சதவீதம் பேர்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தற்போது ஊரடங்கு தேவை யில்லை.
இன்றைக்கு தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வரு கிறது. பெரிய மற்றும் சிறிய நிறு வனங்களில் பணியாற்றும் பணி யாளர்களுக்கு அந்தந்த நிறுவனங் கள், பணியாளர்கள் பூஸ்டர் ஊசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை தனியார் மருத்துவ மனைகளில் அதிக அளவில் விலை கொடுத்து போட வேண்டிய நிலை உள்ளது. 386 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சூழலில், நிறு வனங்களில் பணியாற்றும் பணி யாளர்களுக்கு அந்தந்த நிறுவனம் இலவசமாக தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில் 150 ரூபாய் சர்வீஸ் கட்டணத்தை குறைத்துக் கொள்வ தாக அப்பல்லோ மற்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை களில் சேவை கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பேசப் பட்டு வருகிறது. விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்படும். உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறி விப்பு ஒன்றில், உலகம் முழுவதும் 110 நாடுகளில், பி4, பி5 என்ற ஒமை க்ரான் வைரஸ் பரவி வருவதாக தெரி வித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 15 மாநிலங்களில் தற்போது இந்த பாதிப்பு உள்ளது. இது பெரிய அளவில் உயிர் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் மரு.செல்வ விநாயகம், சட்டமன்ற உறுப்பினர் கள் திருவையாறு துரை.சந்திர சேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீல மேகம், பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை, தஞ்சை மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மரு.நமச்சிவாயம் மற்றும் பலர் உடனிருந்தனர்.