tamilnadu

img

ரெனால்ட் தொழிற்சாலை மூடப்படாது

சென்னை,மே 1- செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  “ரெனால்ட் கார் தொழிற்சாலை மூடப்படவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தி ருப்பது அடிப்படை ஆதாரமற்றது; உண்மைக்கு மாறானது”  என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: “தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே இயங்கி வரும் நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, அத்தொழிற் சாலையை மூடப்போகும் சூழல் உரு வாகி இருப்பதாகவும் அதன் கார ணமாக பெருமளவில் வேலை இழப்பும், தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பும் நேரவிருப்பதா கவும் தெரிவித்து அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை விடுத்தி ருக்கின்றார். ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை, தமிழ்நாடு அரசின் மீது ஏதாவது ஒரு வகையில் குற்றம் சுமத்த  வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால் உண்மை நிலையினை விளக்க வேண்டியது எனது கடமையாகும். ரெனால்ட் நிசான் நிறுவனத் திற்கு, பயணிகள் கார், எரிவாயு டீசல் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டுக் திமுக ஆட்சியில்தான் 2008 ம் ஆண்டு சென்னைக்கருகே ஒரகடம் தொழில் பூங்காவில் சுமார் 610 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந் நிறுவனமும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்திலேயே 1-1-2010 அன்று தனது வணிக உற்பத்தியினைத் தொடங்கி இன்ற ளவும் சிறப்பாக செயல்பட்டு வரு கின்றது.

ரெனால்ட் நிசான் நிறுவனம் மேற்குறித்த உற்பத்தி நிலையத்தில் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் பல்வேறு ரக பயணியர் வாகனங்களைத் தயாரிப்பதோடு, உலகளவில் 15க்கும் மேற்பட்ட ஏற்று மதி சந்தைகளுக்குமான சேவை களையும் வழங்கி வருகின்றது. அண்மையில் இந் நிறுவனம் தனது 50,000 மவது மேக்னைட் எஸ்யூவிரக காரினை வெற்றிகரமாகத் தயாரித்திருக்கின்றது. இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகும் பல்வேறு வகையான கார்களைச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சீர்திருத்தும் நோக்கத்துடன், டாட்சன் வகைக் கார்களின் உற்பத் தியைக் குறைத்துக்கொண்டு புதிய வகைக் கார்களை உற்பத்தி செய்ய விருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயி லாக அந் நிறுவனம் தெரிவித்திருக் கின்றது.

உலகளாவிய சந்தை நிலவரப்படி செமி கண்டக்டர்களின் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், இந்நிறுவனம் தனது உற்பத்தியை சீரான நிலை யில் வைத்திருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான தேவைகளை ஒர கடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டே நிறைவு செய்வதாகவும், தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை வெற்றி கரமாகத் தொடர்ந்து செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. எனவே, ரெனால்ட் நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உரு வாகிடக் கூடும் என்ற ஓ. பன்னீர் செல்வம் கூற்று முற்றிலும் கற்பனைகளால் வடிவமைக் க்கப்பட்ட அனுமானமே தவிர அடிப் படை ஆதாரமற்றதாகும். தொழிற் சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், அங்கே பணிபுரியும் தொழி லாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவதும் உண்மை க்கு மாறானதாகும். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தான் நோக்கியா செல்போன் தொழிற்சாலை மூடப்பட்டது என்ப தும், பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.