tamilnadu

img

போராட்டங்களை வலுப்படுத்த இந்திய மாணவர் சங்கம் அழைப்பு

ஹைதராபாத், டிச.17- பாஜக தலைமையிலான அரசுகளின் அரை- பாசிசத் தாக்குதலை எதிர்கொள்ளும் அனைத் துப் பிரிவினரின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் நாடு தழுவிய, மாநில அளவிலான ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்று வீரதெலுங்கானா மண்ணில் நிறைவடைந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் மல்லுஸ்வராஜ்யம் நகரில் உள்ள அபிமன்யு-தீரஜ்-அனீஸ்கான் அரங்கில் (தாகூர் மண்டபம்) இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 13 முதல் 16 வரை நடை பெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க ளில் கூறப்பட்டுள்ளதாவது:  கோவிட் காலத்தில் நாடாளுமன்றத்தில் விவா திக்க அனுமதிக்காமல் ஒன்றிய அரசால் நிறை வேற்றப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையா னது கல்வியை முழு வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுக் கல்வி முறையை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்.  விவசாயிகளை அடிமைப்படுத்தும் விவாதத் துக்குரிய சட்டங்கள் ஒன்றிய அரசால் நிறை வேற்றப்பட்டன. ஆனால், வரலாற்றுப் புகழ் பெற்ற விவசாயிகளின் கிளர்ச்சியை எதிர் கொண்டு சட்டங்களை திரும்பப் பெற வேண்டியி ருந்தது. விவாதத்துக்குரிய மின்சாரத் திருத்தத் தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மனுஸ்மிருதியை பின்பற்றும் பாஜக-(ஆர்எஸ்எஸ்) ஆட்சியில் பெண்களின் பாது காப்பு மற்றும் முற்போக்கு இயக்கங்கள் தகர்க்கப் படுகின்றன. இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி யால் செயல்படுத்தப்படும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு எஸ்எப்ஐ முன்னணியில் செயல்படும். கல்வித் துறையை ஜனநாயகப் படுத்தவும், கும்பல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடவும், பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடு களில் போராடும் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரி விப்பது உள்ளிட்ட 36 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.