சென்னை, ஜூலை 19- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங் களில் குறிப்பாக சென்னை, திரு வள்ளூர், கோவை, நீலகிரி, கன்னியா குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங் களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் ஜூலை 18 வரை 5,900 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரியில் டெங்கு பாதிப்பு ஆயிரத்தை கடந் திருந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜூலை 10 முதல் 18-ஆம் தேதி வரை 738 பேர் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பரவலைத் தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங் களைச் சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்கள் பாதுகாப்பாகவும் மூடி வைக்கவும், மாநகராட்சி பணி யாளர்கள் கொசு மருந்து தெளிக்க வும், பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.