tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் மார்ச் 6ஆம் தேதிக்குள் அதுகுறித்த அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுத் தேர்தல் முடியும் வரை கால அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் வங்கி தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது. எஸ்.பி.ஐ-யின் இந்த மாண்பமை உச்சநீதிமன்றத்திடமிருந்து மோடி மற்றும் பாஜக வகையறாவை பாதுகாப்பதற்கான அப்பட்டமான முயற்சியே ஆகும். பாரத ஸ்டேட் வங்கி தற்போது மோடிக்காகவும் பாஜகவுக்காகவும் கண்ணாமூச்சி ஆடுகிறது. இது நீதியை கேலி செய்வதாகும்.  இது டிஜிட்டல் யுகம். அனைத்து தகவல்களையும் தங்கள் கையில் உள்ள கம்ப்யூட்டர் மவுஸ் மூலம் ஒரே க்ளிக்கில் அனுப்ப முடியும். ஆனால் கால அவகாசம் கேட்பது முற்றிலும் சந்தேகத்திற்குரியது. ஏற்க முடியாதது.