ஜகர்த்தா, அக்.30- இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடல் போன்களு க்கு அந்நாட்டு அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பித் துள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகளை வாங்கு வதற்கும், விற்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு இந்த தடை பொருந்தும் என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. மீறி இவற்றைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்படும் என அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் அகஸ் குமிவாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அகஸ் குமிவாங் மேலும் கூறுகை யில்,”தடைசெய்யப்பட்ட ஆப்பிள் கேட்ஜெட்டுகளின் பட்டியலில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மாடல்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த போன்களுக்கு நாட்டில் செயல்பட சர்வதேச மொபைல் கருவி அடையாள (IMEI) சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தோனே சியாவில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இதுவரை பட்டியலிடப்படவில்லை. அதனால் யாரேனும் இவற்றை பயன்படுத்தவோ, விற்பனை செய்வதையோ மக்கள் பார்த்தால், உடனடியாக புகார் அளிக்கலாம்” என அவர் கூறினார்.