tamilnadu

img

‘பல்’ வீர்சிங்கின் கொடூரம்: அம்பலப்படுத்திய எப்ஐஆர்

ஐஏஎஸ் அதிகாரி அமுதா இடைக்கால அறிக்கை

சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சட்டப்பேரவையில் வியாழ னன்று காவல்துறை மானிய  கோரிக்கை மீது நடந்த விவாதத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ னிச்சாமி பேசுகையில்,”தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது” என்றார். அப்போது குறிப்பிட்ட முதலமைச் சர், “ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரை திரு விழா, இமானுவேல் ராஜசேகரன் நினைவு தினம் உள்ளிட்ட பல்வேறு சம்ப வங்களின் போது அரசு மேற்கொண்ட நட வடிக்கையால் சாதி, மத மோதல் முழுமை யாக தவிர்க்கப்பட்டது” என்றும்  துப்பாக்  கிச் சூடு நடைபெறவில்லை,

கள்ளச் சாராய சாவுகள் நிகழவில்லை, கொலை,  கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என் றும் கூறினார். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறு,  குற்றங்களும் நடப்பது வழக்கம் தான்.  ஆனால், கடந்த அதிமுக ஆட்சியைப்  போன்று அல்லாமல், கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடனுக்குடன் நட வடிக்கை எடுக்கப்பட்டு குற்றமிழைத்த வர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படு கிறது. கைது நடவடிக்கையும் தொடர்கி றது. குற்றம் செய்தவர்கள் ஆளும் கட்சி யாக இருந்தாலும் கைது செய்யப்பட்டுள்  ளார்கள் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் கூறினார்.  முந்தைய அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் சட்டமன்றம் முற்றிலும் சீர்  குலைந்தது என்றும் முதல்வர் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய எடப் பாடி பழனிச்சாமி அம்பாசமுத்திரம் சம்ப வம் குறித்து எழுப்பிய கேள்விக்கு விளக்  கம் அளித்த முதலமைச்சர்,”இந்த சம்ப வம் குறித்து சமூக வலைதளங்களில் வந்த புகாரை பார்த்தவுடன் அந்த காவல்  துறை அதிகாரி காத்திருப்பு பட்டியலுக்கு  மாற்றப்பட்டார். தொடர்ந்து விசார ணைக்கு உத்தரவிடப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். பின்னர், அந்தக் காவல்துறை அதிகாரி மீது வழக்  கும் பதிவு செய்யப்பட்டது” என்றார். இதற்கிடையில் ஐஏஎஸ் அதிகாரி  அமுதா திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று நான்கு நாட்கள் முழுமையாக  விசாரணை நடத்தி அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றையும் கொடுத்திருக்கி றார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

திருநெல்வேலி, ஏப்.20- விசாரணைக்கு வந்த இளைஞர் களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த திருநெல்வேலி மாவட்ட கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது, பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கை அதிர்ச்சிகரமான பல விபரங்களை உள்ளடக்கியுள்ளது. விசாரணைக்கு வந்தவர்களின் பற்  களைப் பிடுங்கி சித்ரவதை செய்த சம்ப வம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்  வீர்சிங், மார்ச் 29 அன்று பணியிடை நீக்  கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து  காவல்துறையைச் சேர்ந்த ராஜ்குமார்,  போகபூமன், சந்திரசேகரன், பி.ராஜ குமாரி, ஏ.பெருமாள்,  என்.சக்தி நட ராஜன்,  எம்.சந்தானகுமார், வி.மணிகண்  டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் பணியிடை நீக்கம்  செய்யப்பட்ட கூடுதல்காவல் கண்கா ணிப்பாளர் பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்  டும்; பணியில் உள்ள நீதிபதி சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி கிடைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிபிஐ, சி.பி.ஐ.(எம்.எல்),  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  மற்றும்  மனித உரிமை அமைப்புகள் சார்பில் திரு நெல்வேலியில் ஏப்.2 அன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா  விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டு ஏப்.10-ஆம் தேதி முதல் விசா ரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட  சூர்யா தரப்பு சாட்சியம்

முன்னதாக கடந்த மார்ச் 29-ஆம் தேதி  பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா,  சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முஹமது ஷபீர் ஆலம் முன் ஆஜராகி, தவறி  கீழே விழுந்ததில் பல்லை இழந்ததாகக் கூறினார். ஆனால், விசாரணை அதிகாரி யாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட பின் அவரிடம், சூர்யாவின் தாத்தா பூதப்  பாண்டி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.  அது குறித்து பூதப்பாண்டி கூறுகை யில், “தனது பேரனும் (சூர்யா) இன்னும் சிலரும் கல்லிடைக்குறிச்சியில் பொது இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக மார்ச் 26 அன்று இரவு காவல்துறையின ரால் பிடிக்கப்பட்டு மார்ச் 27 அன்று காலை பத்து மணியளவில் விடுவிக்கப்பட்ட தாகக்  கூறினார். “ஒரு மூத்த காவல் அதிகாரி எனது  பேரனின் பற்களை வேரோடு பிடுங்கி னார். எனவே எனது பேரன் உயிருக்குப்  பயப்படுகிறார். எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். மார்ச் 28 முதல் சூர்யாவைப் பார்க்க வில்லை” என்றார்.

பாதிக்கப்பட்ட  மேலும் ஐந்து பேர் சாட்சியம்

சிவந்திபுரத்தைச் சேர்ந்த இ.இசக்கி முத்து, அவரது சகோதரர்கள் இ. செல்லப்பா, இ.மாரியப்பன், எம்.மாரி யப்பன் மற்றும் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதநாராய ணன் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா  முன் ஆஜராகி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

சுபாஷ் புகார்

இந்த நிலையில் பாளையங் கோட்டை, தனசேகரன் (கேடிசி) நக ரைச் சேர்ந்த  இசக்கி மகன் இ.சுபாஷ்  (25) அளித்துள்ள புகாரின் அடிப்படை யில், பல்வீர் சிங் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள விபரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தகவலறிக்கையின் முக்கியப் பகுதிகள் 

சுபாஷ் புகாரின் பேரில் பாதிவு  செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்  அம்சங்கள் வருமாறு: “நான் (சுபாஷ்) தூத்துக்குடியில் ஒரு  தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறேன். கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த லெட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோர் எனது நண்பர்கள். எங்களுக்கும், தெற்குப் பாப்பான்குளத்தைச் சேர்ந்த இன்னொரு வெங்கடேஷ் உள்ளிட்ட சில ருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது.  2023-ஆம் ஆண்டு மார்ச் 22 மதியம் மூன்று மணியளவில் கல்லிடைக்குறிச்சி தலைச்சேரியில் வைத்து எங்களுக்கும், பாப்பான்குளம் வெங்கடேஷ் தரப்பிற் கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பாப்பான்குளம் வெங்கடேஷ் எங்கள்  மீது கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத் தில் புகார் செய்து விட்டார். நாங்கள் மூன்று பேரும் பயந்து போய் எனது வீட்டில் அன்றிரவு தூங்கினோம். மார்ச் 23 காலை சுமார் 8.15 மணியளவில் என்   வீட்டிற்கு வந்த காவலர்கள் பஷீர், இசக்கி  மற்றும் இன்னொருவர், எங்கள் மூவரை யும் தனியார் காரில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்  றனர். எங்களை அழைத்துச் செல்லும்  போதே, கூனியூர் அருகே அம்பாசமுத்தி ரம் ஏஎஸ்பி பல்வீர்சிங்கும் ஒரு பொலிரோ வாகனத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு முன்னால் சென்  றார். சுமார் பத்து மணியளவில் கல்லி டைக்குறிச்சி காவல் நிலையம் சென்ற தும், ஏஎஸ்பி பல்வீர்சிங் எங்களை ஆடை களை அவிழ்க்கச் சொல்லிவிட்டு உள்ளா டையுடன் நிற்க வைத்தார். பின் காவ லர்கள் எங்களை காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். 

லெட்சுமி சங்கரின் மேல்தாடை பல்

அங்கு ஏஎஸ்பி பல்வீர்சிங், சிஐடி காவ லர் ராஜ்குமார், ரைட்டர் சுடலை, போலீசார் விக்னேஷ், சதாம், பஷீர், இசக்கி மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இன்னொரு காவலர் ஆகியோர் இருந்தனர். ஏஎஸ்பி பல்வீர்சிங், காவலர் சதாம் என்பவரிடமிருந்து ஒரு பாக்ஸை வாங்கி அதற்குள் இருந்த ஒரு கட்டிங் பிளேடை எடுத்து லெட்சுமிசங்கரின் மேல்தாடையில் ஒரு பல்லைப் பிடுங்கினார். அவர் வலியால் அலறித்துடித்தார். ரத்தம் வாயிலிருந்து கொட்டியது. ரைட்டர் சுடலை  தரையில் சில பேப்பர்களை விரித்து, ரத்தம் பேப்பர்களில் சிந்துமாறு பார்த்துக்கொண்டார். 

சுபாஷின் மூன்று பற்களை பிடுங்கிய கொடுமை

 ஏஎஸ்பி பல்வீர்சிங் என்னை (சுபாஷ்) வாயைத் திறக்கச் சொன்னார். பல்லைப்பிடுங்கி விடுவார் என்று பயந்து நான் அவரை அருகில் வரவிடாமல் தடுக்க முற்பட்டபோது, சிஐடி ராஜ்குமார் அவரைத் தொடக்கூடாது என அதட்டினார். பின்னர் ஏஎஸ்பி பல்வீர்சிங் என் வாய்க்குள் கட்டிங் பிளேடை விட்டு, வலது கீழ்த்தாடையில் என்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரே நேரத்தில் மூன்று பற்களைப் பிடுங்கி விட்டார். வாயிலிருந்து ரத்தம்  கொட்டியது. ரைட்டர் சுடலை ரத்தம் கீழே படாதவாறு பேப்பர்களை விரித்தார். நான் வலியில் அலறித் துடித்தேன். 

காலில் விழுந்து  கதறிய வெங்கடேஷ்

ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களைப் பிடுங்க மூன்றாவதாக வெங்கடேஷை அழைத்தபோது, அவர் தன்னை விட்டு விடுமாறு ஏஎஸ்பி காலில் விழுந்து கெஞ்சினார். உடனே வெங்கடேஷின் காதில் கட்டிங் பிளேடால் அழுத்திப் பிடித்தார். பின்னர் வெங்கடேஷின் முதுகை கட்டிங் பிளேடால் பிடித்துத் தூக்கினார். வெங்கடேஷ் வாயைத்திறக்க மறுத்ததால் வெங்கடேஷை வாயைத் திறக்கச் சொல்லுங்கள், இல்லையென்றால் உங்களுக்கு இன்னும் மூன்று பல்லைப் பிடுங்கிவிடுவேன் என மிரட்டினார். அதனால் அச்சமடைந்த நாங்கள் வெங்கடேஷை வாயைத்திறக்கச் சொல்லி அழுதோம். அவரும் வாயைத் திறந்ததும், கீழ்த்தாடையிலிருந்து மூன்று பற்களைப் பிடுங்கினார். அவர் அலறித்துடித்தார். ரத்தம் ஆறாகக் கொட்டியது. சத்தம் போடாதே என்று ஏஎஸ்பி அவரை லத்தியால்  அடித்தார். ரைட்டர் சுடலை வழக்கம்போல கீழே பேப்பர்களை விரித்தார்.  பின்னர் எங்களை வாய், முகம் உடலைக் கழுவச் சொல்லிவிட்டு, கீழே சிதறிக் கிடந்த ரத்தத்தையும் எங்களையே கழுவி விடச் செய்தனர்.  பின்னர் காலை 10.45 மணியளவில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி  மாத்திரை-  கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்தார். டிரஸ் எடுத்துக் கொடுத்து அங்கேயே அமர வைத்தார்.  சுமார் நான்கு மணி அளவில் எங்கள் மூவரையும் ஆய்வாளர் ராஜகுமாரி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள்நோயாளியாகச் சேர்த்தனர். பின்னர் அடுத்த நாள் மார்ச் 24-ஆம் தேதி காலை ஏழு மணியளவில் வேறு ஒரு வார்டுக்கு மாற்றிவிட்டனர். ஆய்வாளர் ராஜகுமாரி அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டார். நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறோம் என்று டாக்டரிடம் நீங்களாகவே சொல்லுங்கள் என்று அவர் சொல்லச் சொன்னதின் பேரில் நாங்களும் டாக்டரிடம் அப்படியே சொன்னோம். சுமார் மூன்று மணியளவில்  எங்களை டிஸ்சார்ஜ் செய்தார்கள். 

போலி ஆவணம் தயாரிப்பு

பின்னர்  ஆய்வாளரும், சிறப்புப்படைக் காவலரும் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.  கரம்பை என்ற ஊர் அருகில் எங்களை ஜீப்பில் இறந்து இறக்கி காரில் ஏற்றிச் சென்று பாபநாசம் விஜய் லாட்ஜில் தங்க வைத்தனர். எங்களுடன் வக்கீல் கணேசனும், இன்னொரு வக்கீலும் தங்கிக் கொண்டனர்.  இரவு 10.30-மணியளவில் எங்களை பாபநாசம் சேனைத்தலைவர் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நாங்கள் வாகனத்திலிருந்து கீழே விழுந்தது போல சில ஆவணங்களைத் தயாரித்து எங்களிடமும், எங்கள் வீட்டாரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். போலி ஆவணங்களைத் தயாரித்தது காவல் ஆய்வாளர் ராஜகுமாரி.  அவருடன் அரசு வழக்கறிஞர் திருமலைக்குமார், எஸ்ஐ ஆபிரஹாம் ஜோசப் மற்றும் சில போலீசார் இருந்தனர்.  பின்னர் எங்களை மார்ச் 25 அதிகாலை சுமார் 00.30 மணியளவில் எங்கள் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். அனுப்பி வைக்கும்போது, பல்புடுங்கியதை வெளியில் சொல்லக்கூடாது. ஒரு வாரத்திற்கு உள்ளூரில் இருக்கக் கூடாது.  நாளை காலை கூப்பிடும் போது மட்டும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும். மீறினால்  அடித்து விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர். மார்ச் 25 மதியம் சுமார் ஒரு மணியளவில் மணிமுத்தாறு கேம்ப் போலீஸ் கேண்டின் அருகில் வைத்து வைத்தியச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வக்கீல் திருமலைக்குமாரும், ஆய்வாளர் ராஜகுமாரியும், எஸ்ஐ ஆபிரஹாம் ஜோசப்பும் எங்கள் மூவருக்கும் தலா முப்பதாயிரம் கொடுத்தனர். அதை சிஐடி ராஜ்குமார் தன் போனில் வீடியோ எடுத்தார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வெளியில் சொன்னால் உறுதியாக குண்டாஸ் போட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்பினர். 

என்னையும், என் நண்பர்களையும் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்து கொலை செய்ய முற்பட்ட  ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புத்தர வேண்டும். இவ்வாறு சுபாஷ்அளித்த மனுவை முதல் தகவலறிக்கையாக பதிவு செய்துள்ளார் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை  துணைக் கண்காணிப்பாளர் பொன்.ரகு. இப்புகாரின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் மீது 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (மரணத்தை விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துதல்), 326 (ஆபத்தான ஆயுதங்கள் மூலம் கொடுங்காயம் ஏற்படுத்துதல்), ஐபிசி 506(1) (கொலை மிரட்டல்)  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடிக்கு மாற்றம் இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் செ.சைலேந்திரபாபு விசாரணை அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது வழக்கு விவரங்களை வழங்கக் கோரி  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன், அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது மனு நிராகரிக்கப்பட்டதா அல்லது திருப்பியனுப்பப் பட்டதா  என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.