tamilnadu

img

அதானி குழுமம் பெற்றுள்ள கடன் எவ்வளவு? பதிலளிக்க மோடி அரசு மறுப்பு

புதுதில்லி, மார்ச் 13 - ‘‘பறி கொடுத்தவர்கள் பக்கம் நில்லாமல் பறித்தவர் பக்கம் சட்டம் இருக்குமானால் அதைத் திருத்துங்கள்’’ என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,  அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்று நாடாளு மன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார்.  அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. “ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45இ- இன் படி வங்கிக் கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியிட இயலாது” என மறுத்துள்ளார். 

குடியுரிமை குறித்தே சட்டத்திருத்தம் வருகிறது. ஒரு மாநிலத்திற்கு இருக்கிற சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆளு கைப் பகுதியாக மாற்றப்பட முடிகிறது. விவ சாயிகளைக் கொந்தளிக்க வைத்த 3 சட்டங்களை நிறைவேற்ற இவர்களது அரசால் முடிந்தது. பின்னர் திரும்பப் பெற வேண்டியும் வந்தது.  ஆனால், தங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிப்பு என்ன ஆகும் என்று மக்கள் பதறும் போதும் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு ரகசியம் என்கிறது ஒன்றிய அரசு. சட்டம் குறுக்கே வந்தால் சட்டத்தைத் திருத்துங்கள் நிதி அமைச்சரே!  அதானி குழுமத்திற்கு எல்ஐசி தந்துள்ள கடன் டிசம்பர் 31, 2022 அன்று ரூ.6,347 கோடிகள். மார்ச் 5, 2023 அன்று ரூ.6,182 கோடிகள். எல்ஐசி தந்துள்ள கடன் பாலிசிதாரர்களின் சேமிப்புப் பணம்தான். எல்லா முன் எச்சரிக்கைகளையும் கணக்கிற் கொண்டே கடன்கள் வழங்கப் பட்டு இருப்பதாக இந்த அரசு நிதி நிறுவனங் கள் விளக்கம் தருகின்றன. ஆனால், அதானி யின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது. ஆகவே அதானி நிறுவனங்களில் உள்ள முதலீடு/ கடன் பற்றி விசாரணை தேவை.  வங்கிகள் வழங்கியுள்ள கடன், எல்ஐசி தந்திருப்பது போல நிச்சயம் பல மடங்கு  இருக்கும். இது மக்கள் பணம். அதை  வங்கிகள் எவ்வளவு, யாருக்கு தந்திருக் கின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.  பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்கு மானால் அதைத் திருத்துங்கள். மக்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் சேமிப்பின் கதி என்ன? பணத்திற்கு பாதுகாப்பு என்ன? அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தர விடுங்கள்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.