tamilnadu

img

சிபிஎம் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பால் 5 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு

சிபிஎம் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பால் 5 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு 

திருச்சி, ஜுன் 6-  திருச்சி மாவட்டம் தாராநல்லூர், கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் 6 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காமல் அலைக்கழிப்பதைக் கைவிட்டு, 21.10.2024 அன்று நடைபெற்ற போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தையொட்டி வட்டாட்சியர் முன்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நடைபெற்றது.  இந்நிலையில், 6 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காமல் தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்டு வந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழு மற்றும் கல்மந்தை அடுக்குமாடு குடியிருப்பு மக்கள் சார்பில், கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை அன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி, கிழக்கு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் ராமர், கல்மந்தை கிளைச் செயலாளர்கள் மகாலிங்கம், சங்கீதா, விஷால், ரவி, இந்திரா, பவானி, பிச்சையம்மாள், குஞ்சரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் 6 பேருக்கான வீடுகளுக்கு விசாரணை முடிக்கப்பட்டு, அதில் 5 பேருக்கு வீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.