tamilnadu

img

கூடுதல் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்: தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 12 - மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டி யுடன் திரும்ப செலுத்த வேண்டுமென தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், திருபெரும்புதூர் அருகே தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில்  சேர்ந்தேன். அப்போது கல்விக் கட்டண மாக 2011 - 2014 ஆம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை வங்கி கல்வி கடன் மூலம் செலுத்தினேன். பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்ட தாரி என்பதாலும் அரசின் உதவித் தொகை நேரடியாக கல்லூரிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், என்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது. படிப்பு முடித்த பின்பு கல்விக் கடனை செலுத்திய நிலையில், மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் கல்லூரியை நாடியபோது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம்  வசூலித்தது தெரியவந்தது. எனவே,  அதிக கட்டணம் வசூலித்த ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மீது நடவடி க்கை கோரி உயர் கல்வித் துறை அதிகாரி களுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த உத்தர விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக் கழகம் பதிவாள ருக்கும், தொழில்நுட்பக் கல்வி ஆணை யருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மனுதாரரிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்வி கட்டணம் 60 ஆயிரம்  ரூபாயை 7.5 விழுக்காடு வட்டியுடன் திரும்ப செலுத்த கல்லூரி நிர்வாகத்திற் கும் உத்தரவிட்டார்.