tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர் களின் காவலை ஜனவரி 13 ஆம் தேதி வரை நீட்டி த்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர் களின் விவரங்களைப் புதுப் பிப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து பிரிட்டன் விமானங்களும் கொல் கத்தாவுக்கு வர தடை விதித்து மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக் கெட் மூலம் ஈரான் விண் ணில் செலுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்த மான இடங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பு களை அகற்ற வட்டாட்சி யர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமை ச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அதிநவீன பிரமோஸ் ஏவு கணைகளைத் தயாரித்து வழங்குவதற்காக, அந்நாட்டுக்கும் இந்தியா வுக்கும் இடையே விரை வில் ஒப்பந்தம் இறுதி யாகவுள்ளது.