கற்றலை அதிகரிக்கும் கையெழுத்து
கையினால் எழுதுவது மூளைப் பகுதிகளினி டையே இணைப்பை அதிகரிக்கிற தாம். இந்தப் பகுதிகள் கற்றல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றோடு தொடர்புடையன என்பது ஒரு ஆய் வில் தெரிய வந்துள்ளது. வார்த்தை களை டைப் செய்யும்போது ஏற்படும் இணைப்புகளை ஒப்பிடும்போது கையினால் எழுதும்போது நினைவுப் பதிவுகளுடன் தொடர்புடைய மூளை அலைகள் அதிகரித்துக் காணப் படுகிறதாம். இந்த ஆய்வு ஜனவரி 26 தேதியிட்ட Frontiers in Psychology எனும் இதழில் வெளி யிடப்பட்டுள்ளது. இதனால் கையெழுத்தை பாடமாக நடைமுறைப்படுத்தும் சட்டங்கள் வலுப்பெறும். எடுத்துக்காட்டாக கலிஃபோர்னியாவில் 1 முதல் ஆறாம் வகுப்பு வரை கூட்டெழுத்து கற்பிக்கப் பட வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள், கையினால் எழுதுவது எழுத்துக்களையும் உச்சரிப்புகளை யும்(spelling) துல்லியமாக்குகிறது; நினவுகூறல்; கருத்தாங்கங்களை புரிந்து கொள்வது ஆகியவற்றை மேம்படுத்துகிறது எனக் காட்டியு ளளன. ஒவ்வொரு எழுத்தையும் வார்த்தையையும் மெதுவாக வடி வமைக்கும்போது எழுதுபவருக்கு பொருளை ஆய்வு செய்து கற்றுக் கொள்ள நேரம் கிடைக்கிறது. நார்வே அறிவியல் தொழில்நுட்பப் பல்க லைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மாணவர்களிடம் கணினித் திரையில் தோன்றும் வார்த்தைகளை டைப் செய்யவும் கையினால் எழுதவும் கூறப்பட்டது. அப்போது அவர்கள் மூளையில் ஏற்படும் மின் அலைகள் சென்சார்கள் கொண்டு பதிவு செய் யப்பட்டன. கையினால் எழுதும்போது மூளையிலுள்ள இயக்கப் பகுதிகள் மட்டுமல்லாது கற்றல் பகுதிகளிலும் இணைப்புகள் ஏற்பட்டன. இந்த முடிவை உறுதி செய்ய மேலும் தொடர் ஆய்வுகள் தேவைப்படும். சில விஷ யங்களுக்கு டைப்பிங் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கட்டுரையை டைப் செய் வதுதான் எளிது. ஆனால் வகுப்பில் குறிப்புகள் எடுக்கும்போது கையெ ழுத்தே சிறந்தது. ஒரு மளிகைக் கடை பட்டியலோ அல்லது ஒரு காதல் கடி தமோ கூட எழுதலாம் என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழ கத்தை சேர்ந்த நரம்பியல் அறிவிய லாளர் ரமேஷ் பாலசுப்ரமணியன்.
கேரளத்தில் அமுலாகும் H1 விதி
பேக்டீரியா போன்ற நுண்கிருமி களினால் ஏற்படும் நோய்களுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் மருந்து களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின் றனர். ஆனால் இவற்றை தவறாக பயன்படுத்துவதனால் கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டு விடுகின்றன. இது ஆன்டிமைக்ரோபி யல் ரெஸிஸ்டன்ஸ் (AMR)என்ற ழைக்கப்படுகிறது. மருத்துவர்கள் பரிந் துரை இல்லாமல் நேரடியாக கடை களில் விற்கப்படும் ஓவர் தி கவுன்ட்டர் (OTC) எனப்படும் முறையை தடுக்க அர சாங்கம் H1 எனும் விதியை 2011இல் இயற்றியது. ஆனால் நம் நாட்டில் நில வும் சுகாதார அமைப்பின் காரணமாக இதை அமுல்படுத்துவது பெரும் சவா லாக இருந்தது. 2013இல் மருத்துவ சங்கங்களின் முன்னெடுப்பு மற்றும் சென்னை பிரகடனம் என்பதன் அடிப்ப டையில் இந்த தடை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருந்துகளுக்கு மட் டுமே; முதல் நிலை மருந்துகளுக்கு இல்லை என்று தளர்த்தப்பட்டது. நாட்டின் தொலைதூர பகுதிகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் உயிர் காக்கும் இந்த மருந்துகள் பரிந்துரை இல்லா மல் விற்கலாம் என்கிற தளர்வு ஏற் படுத்தப்பட்டது. இந்த தடையை இது வரை எந்த மாநிலமும் நடைமுறைப் படுத்தவில்லை. அண்மையில் கேரள அரசு மட்டுமே அம்ரித்(AMRITH (Antimicrobial Resistance Intervention for Total Health) என்கிற திட்டத்தின் மூலம் தொடங்கியுள்ளது. இதன்படி எந்தவகை ஆன்டிபயாட்டிக் மருந்தும் மருத்துவர் பரிந்துரை இல்லா மல் விற்கப்படக்கூடாது. கேரளா வில்மருத்துவர்-நோயாளி விகிதம் கிராமங்களில் கூட அதிகமாக இருப்ப தால் இந்த விதியை நடைமுறைப் படுத்துவது எளிதாக உள்ளது. மேலும் அங்கு எழுத்தறிவு கொண்ட மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்ப தால் இந்த விதியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள். ஆனாலும் இதன் பலன்கள் உடனடியாக கிடைக் காது; பல ஆண்டுகளுக்குப் பிறகே இதன் தாக்கம் தெரியவரும். இருந்த போதிலும் ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்து களை தவறாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி AMR ஐ தடுக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க உதவும்.
கிளியாட்டம்
கிளிகள் தங்கள் அலகால் கிளைகளைப் பற்றிக் கொண்டு பக்கவாட்டில் ஆடி ஆடி கால்களால் அடுத்தடுத்த கிளைகளைப் பற்றி நகரக்கூடியவை. இந்த வகை இயக்கதிற்கு ‘அலகாட்டம்’ ( beakiation) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கிளிகளுக்கு இது ஒரு சிறப்பு திறமை என்கிறார் நியூயார்க் தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த உயிர் இயந்திரவியலாளர் மைக்கேல் கிரனோட்ஸ்கி. இதை சோதிப்பதற்காக 2.5 மில்லிமீட்டர் விட்டமுள்ள மெல்லிய கம்பியில் அவற்றை வைத்தபோது, தங்கள் அலகு மற்றும் கால்களை பக்கவாட்டில் மாற்றி மாற்றி ஆடுவதே அதில் நகர்வதற்கு சிறந்தது என்று கிளிகள் கண்டன.ஒவ்வொரு ஆட்டத்திற்கும் நொடிக்கு 10 சென்டிமீட்டர் நகர்ந்தன. இதற்காக அவற்றிற்கு பயிற்சி எதுவும் கொடுக்கப்படவில்லை. புதிய சிக்கலுக்கு அவை தாமாகவே கண்டுபிடித்த புதிய வழிமுறையாகும் என்கிறார் எட்வின் டிக்கன்சன். கிளிகள் மூளைக்காரர்கள் என்பது தெரிந்ததே. இந்த சோதனையில் கிளிகள் செலவழிக்கும் சக்தி கணக்கிடப்பட்டது. ஊசல் போன்ற இந்த இயக்கத்தில் கிளிகள் 24% ஆற்றலை மீட்டன. ஆனால் கிப்பன் குரங்குகள் கைகளால் கிளைகளுக்கிடையே தாவும்போது 80% ஆற்றலை திரும்பப் பெறுகின்றன. ‘கிளைகளாட்டம்’(brachiation) எனப்படும் இந்த அசைவு வேகமாகவும் தடங்கலில்லாமலும் நடைபெறுகிறது. பறவைகள் பொதுவாக அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன. அங்கு பறப்பது சிரமமாக இருக்கும்.கொடிகளும் மெல்லிய கிளைகளுமே பயணிப்பதற்கு ஒரே வழியாக இருக்கும். ஆகவே அலகால் அசைவது கவனமானதும் நிறுத்தி நிறுத்தி செய்யும் வகையாகும். கிளிகள் அலகின் உதவியோடு நடக்கும் பல வகைகளில் இதுவும் ஒன்று என்கிறார் நெவடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் லீ.