குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை, ஜூன் 6 - தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் விண்ணப்ப தாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப் போது வெளியிட்டு வருகிறது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஜூன் 15 இல் இந்த பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடை பெறும். துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.