உயர்கல்வியில் சேராதவர்களுக்கு இன்று குறைதீர் முகாம்
புதுக்கோட்டை, ஜுன் 15- 12-ஆம் வகுப்பு படித்து உயர் கல்வயில் சேர முடியாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் ஜுன் 16 (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தற்போது பயின்று கல்லூரிகளில் உயர்கல்வி சேராமல் உள்ள மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், உயர்கல்வி பயில தேவையான சான்றுகள் பெறமுடியாத மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ஜுன் 17 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கிலும் மனுக்கள் அளிக்கலாம். எனவே, இம்முகாமில் உதவி தேவைப்படுகிற மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.