tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் பச்சைத் துரோகம்

சென்னை,ஏப்.28- மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு க்கு ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்க ளில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புக்கு ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழ் நாட்டிற்கு வழங்கியி ருக்கிறது.  அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்தி ற்கு உரியதாகும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.