tamilnadu

img

அரசு ஊழியர் சங்க தலைவர் தோழர் ஸ்ரீராம் படத்திறப்பு

மதுராந்தகம், மே 12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவரும், தமிழ்நாடு கண் மருத்துவ உதவியாளர் சங்கத்தின்  முன்னாள் மாநிலத் தலை வருமான தோழர் எம்.என்.ஸ்ரீராம் (வயது 59) சமீபத்தில் காலமானார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும் திறம்பட செயலாற்றியவர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர் சங்க பணிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர். மறைந்த தோழர் ஸ்ரீராம் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் வெள்ளியன்று (மே11) மதுராந்தகத்தில் அவரது இல்லத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.பூங்குழலி தலை மையில் நடைபெற்றது. ஸ்ரீராம் படத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.அன்பரசு திறந்து வைத்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் சி.முகமது உசேன், வி.லெனின், அலோசியஸ் துரைராஜ் (ஆசிரியர்கூட்டணி),  மாவட்டத் தலை வர் மகாலட்சுமி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பரணி, கிராம உதவி யாளர் சங்க முன்னாள் மாநில பொரு ளாளர் கோவிந்தன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வி.பொன்னுசாமி, மாவட்டச் செய லாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொரு ளாளர் இளங்கோ சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி, சுகாதார பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வசந்தகுமார் மற்றும் தோழர் ஸ்ரீராம் குடும்பத்தினர்  கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.