tamilnadu

img

அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை மாநிலக் கல்லூரி முதலிடம்

சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வு  புதன்கிழமை (ஜூன் 4) தொடங்கி உள்ளது. மொத்த விண்ணப்பங்களில் சென்னை மாநிலக் கல்லூரி, கோவை நந்தனம் உள்ளிட்ட 5 கல்லூரி களுக்கும் சுமார் 70 சதவிகிதம் விண்ணப்பங்கள் குவிந்து கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு புதிதாக தொடங்கப் பட்ட 11 கல்லூரிகள் உட்பட 180 அரசு கலை அறி வியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த இடங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் மாண வர்கள் விண்ணப்பப்பதிவு செய்ததில், 1 லட்சத்து 84  ஆயிரத்து 762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி னர். சென்னையில் மட்டும் 8 கல்லூரிகளில் 10,400  இடங்களுக்கு மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். மாநில அளவிலான விண்ணப்ப பதிவில் சென்னை மாநிலக் கல்லூரி, கோவை, நந்தனம், வியாசர்பாடி, திருச்சி அரசுக் கல்லூரிகள் மட்டும் 1  லட்சத்து 56 ஆயிரத்து 971 விண்ணப்பங்களை பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. மொத்த  விண்ணப்பத்தில் இது 69.76 சதவிகிதமாகும். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள 2380  இடங்களுக்கு 40 ஆயிரத்து 167 விண்ணப்பங்க ளும், கோவை அரசு கலைக்கல்லூரியில் 1727 இடங் களுக்கு 33,757 விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. நடப்பு ஆண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்ட நந்தனம் அரசு கலை கல்லூரியில் 1430 இடங்களுக்கு 29,376 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் 1086  இடங்களுக்கு 29 ஆயிரத்து 275 விண்ணப்பங்க ளும், திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் உள்ள 1600 இடங்களுக்கு 24,396 பேர் விண்ணப்பித் துள்ளனர். அதிக வரவேற்பு பெற்ற பாடப் பிரிவு பி.எஸ்.சி கணினி அறிவியல் படிப்பிற்கு மாண வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதைத்  தொடர்ந்து பி.ஏ தமிழ், பி.காம், பி.ஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி வேதியியல் மற்றும் பி.ஏ.  பொருளாதாரம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங் கள் குவிந்துள்ளன. குறிப்பாக மாநில கல்லூரிக்கு  மொத்தமாக வந்த 40 ஆயிரத்து 162 விண்ணப்பங் களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிஎஸ்சி  வேதியலுக்கே விண்ணப்பித்துள்ளனர். பொருளாதாரம், வரலாற்று ஆய்வுகள், அரசியல் அறிவியல் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் குவிந் ததால் மாநிலக் கல்லூரியில் இருந்த 1190 இடங்களை  இரட்டிப்பாக 2380 இடங்களாக அதிகரித்ததாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.  நந்தனம் கல்லூரி, ராணிமேரி கல்லூரியிலும் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடப் பிரிவுகளில் கூடுதல் இடங்களை உருவாக்க அந்தந்த கல்லூரி  சார்பில் கல்வி இயக்கத்திற்கு கோரிக்கை வந்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.