உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார்
மதுரை, மே 19 - மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி ஒன்றியத் திற்குட்பட்ட உத்தப்புரம் முத்தாலம் மன் கோவில் திருவிழாவை அனைத்து சமூக மக்களும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் சம உரிமையுடன் வழிபடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 21.4.2025 அன்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக காவல்துறையும், வருவாய்த் துறையும் ஆதிக்க சாதி யினரை மட்டுமே கோவிலில் வழிபட அனுமதித்தனர். இந்நிலையில், பட்டி யல் சமூக மக்களை கிடா வெட்டவோ, பொங்கல் வைக்கவோ அனுமதிக்கா மல், கோவிலுக்கு பூட்டு போட்டு தடுத்து விட்டனர். பட்டியல் சமூக மக்களின் வழி பாட்டு உரிமையை மறுத்தும், ஆதிக்க சாதிக்கு ஆதரவாகவும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்ட தமிழக காவல்துறை மற்றும் வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின்படி, இந்து சமய அற நிலையத் துறை மூலம், பட்டியல் சமூக மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் கடந்த வெள்ளியன்று மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு அளிக்கும் நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்டப் பொருளாளர் பி.மகா லிங்கம் மற்றும் உத்தப்புரம் கிராமத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.