tamilnadu

img

அறிவியலே துணை! - முனைவர் இரா.செந்தில்குமார்

அறிவியல் அறிவைத் தருவதுண்டு -அதால்
 ஆழ்ந்த சிந்தனை வருவதுண்டு
அறிவைப் பெருக்க வழியுண்டு- அதில்
 ஆராய்ச்சி சிந்தனைப் பலவுண்டு

பற்பல அதிசயம் அதிலுண்டு-  அதைப் 
 படித்தால் தனித்த சிறப்புண்டு. 
கற்றிட நன்மை  பலவுண்டு -நம்
 கல்வி வளர்ந்திட வழியுண்டு..

கணினி கைப்பேசிப்  பயனுண்டு - மாணவர் 
 கற்றல் மேம்படும் திறனுண்டு!. 
வானின் கோள்கள் துணைகொண்டு-நாட்டை
வளமாய்  ஆக்கும்   செயலுண்டு!

சிந்தனை  செய்தால்  சிறப்புண்டு -அதைச்
 செய்யாது போனால் இழுக்குண்டு!
நிந்தனை  இருளில் விழக்கண்டு-நீ
 நீக்கிட எழுவாய் செயல்கொண்டு!

வானத்தின் கோள்கள் பலகண்டு-உயிர்
 வாழ்ந்திடும்  ஆய்வின் திறன்கண்டு!
கானகம் மலைகள் கடல்கண்டு-அதைக்
 காப்பாய்  கோள்கள் துணைகொண்டு!