அறிவியல் அறிவைத் தருவதுண்டு -அதால்
ஆழ்ந்த சிந்தனை வருவதுண்டு
அறிவைப் பெருக்க வழியுண்டு- அதில்
ஆராய்ச்சி சிந்தனைப் பலவுண்டு
பற்பல அதிசயம் அதிலுண்டு- அதைப்
படித்தால் தனித்த சிறப்புண்டு.
கற்றிட நன்மை பலவுண்டு -நம்
கல்வி வளர்ந்திட வழியுண்டு..
கணினி கைப்பேசிப் பயனுண்டு - மாணவர்
கற்றல் மேம்படும் திறனுண்டு!.
வானின் கோள்கள் துணைகொண்டு-நாட்டை
வளமாய் ஆக்கும் செயலுண்டு!
சிந்தனை செய்தால் சிறப்புண்டு -அதைச்
செய்யாது போனால் இழுக்குண்டு!
நிந்தனை இருளில் விழக்கண்டு-நீ
நீக்கிட எழுவாய் செயல்கொண்டு!
வானத்தின் கோள்கள் பலகண்டு-உயிர்
வாழ்ந்திடும் ஆய்வின் திறன்கண்டு!
கானகம் மலைகள் கடல்கண்டு-அதைக்
காப்பாய் கோள்கள் துணைகொண்டு!