tamilnadu

img

காலநிலை மாற்றத்தை மனதிற்கொண்டே எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட மிகக்கடுமையான மழை - வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டது குறித்து மத்திய நிபுணர் குழு பாராட்டு தெரிவித்தது. இந்தப் பின்னணியில், தமது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சென்னை மற்றும் புயல் வெள்ளம் பாதிக்கும் மாவட்டங்களை பாதுகாப்பதற்கான எதிர்காலத்திட்டம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியதன் தேவை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டிற்கு விரிவான நேர்காணல் அளித்திருந்தார். அதன் பகுதிகள் வருமாறு: 

சென்னை உட்பட தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள் குழு,  தமிழ்நாடு அரசின்  முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின்  குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி  இருக்கிறது. ‘சரியான நேரத்தில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த தாலேயே பெரும் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது, இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்’ என்றும், ‘உரிய நேரத்தில் நீர் திறந்து விடப் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டி ருக்கிறது’ என்றும், ‘அதற்காக இந்த அரசை  நாங்கள் பாராட்டுகிறோம்’ என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது. இதே கருத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்கள். அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக்காரணம். புயலுக்கு முன்பும் - புயலின் பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரண மாகத்தான் பாதிப்பு குறைந்தது. பொதுவாக மக்கள் பணியாற்றும் நாங்கள் மேலும் மேலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். இன்னும் அதிகமாக மக்களுக்கு உதவவே நான் ஆசைப்படுகிறேன்.

2015; 2023 வேறுபாடு என்ன?

செம்பரம்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கார ணத்தால் - அதிமுக ஆட்சியில் சென்னையே மிதந்தது. ஏரியைத் திறந்துவிடுவதற்கான அனுமதியை அம்மையார் ஜெயலலிதா விடம் வாங்குவதற்கு நாள்கணக்கில் காத்திருந்தார்கள் அதிகாரிகள். ஆனால் இப்போது அப்படி அல்ல. உரிய நேரத்தில் தண்ணீரைப் படிப்படியாகத் திறந்து விட்டு, தயார் நிலையில் இருந்தோம். ஆனா லும் வெள்ளம் அதிகமாக வரக் காரணம், மழையின் அளவு அதிகமாகஇருந்ததுதான். இதுகுறித்து முன்னாள் எம்ஐடிஎஸ் இயக்குநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் அவர் களுடைய ஊடகப் பேட்டி ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்தப் பேட்டி யில், “2015 பேரிடர் மனிதரால் ஏற்பட்ட பேரழிவு. அது மழை வெள்ளத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் 2023 பேரிடர் கொடூரப் புயல் காரண மாக 36 மணி நேரத்தில் 530 மி.மீட்டர் மழை பெய்த காரணத்தால் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.  மிக்ஜம் புயலானது சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் 16 மணி நேரம் நிலை கொண்டிருந்தது.  மணிக்கு 8 முதல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இதுவே, சென்னையில் பரவலாக இடை விடாது கனமழை பெய்யக் காரணமாயிற்று. 47 ஆண்டுகளில் பெய்யாத மழை, 177 ஆண்டு களில் மூன்றாவது பெரிய மழை. எனவேதான் தண்ணீர் அதிகம் தேங்கியது. கடல் மட்டம் உயர்ந்து இருந்ததால், போய்ச் சேரும் தண் ணீரை உள்வாங்கவில்லை. இதுவும் இப்போ தைய சூழ்நிலைக்குக் காரணம் ஆகும்.  ஒன்றிய அரசிடம் நிதிக் கோரிக்கை வைக்கும் எனது கடிதத்தைப் பிரதமர் அவர் களிடம் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலை வர் டி.ஆர்.பாலு கொடுத்தபோது, இதே  கருத்தைத்தான் பிரதமர் மோடி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

காலநிலை மாற்றம்: மிகப்பெரிய பிரச்சனை

இந்தியாவிலேயே மற்ற மாநில அரசு களுக்கு முன்மாதிரியாகக் காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கான சிறப்பு குழுவையும் அரசு அமைத்துள்ளது. துறை யின் பெயரை “சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை” என்று அறிவித்தோம். தமிழ்நாட்டிற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம். எனவே மக்கள் தொகையின் அடர்த்தி -  மழையின் அளவு - புயல் சீற்றங்கள் - வடி கால் கொள்ளளவு - வெள்ளச் சமவெளி கள் - கடல் மட்டம் - புவி வெப்பமயமாதல் -  ஆகிய அனைத்தையும் மனதில் வைத்து  திட்டங்களை உருவாக்க வேண்டும். கால நிலை மாற்றம்தான் நாம் எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய பிரச்சனையாக இரு க்கப் போகிறது. இதையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உடனடித் திட்டங்கள் என்ன?

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு கால த்தில் எந்தப் பணியையும் திட்டமிட்டுச் செய்ய வில்லை அதிமுக அரசு. அதன் விளைவு களைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2021-ஆம் ஆண்டு  மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் முன் னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலை மையில் ஆலோசனைக் குழுவை அமைத் தோம். அவர்களது ஆலோசனைப்படி திட்ட ங்களைத் தீட்டி வருகிறோம். * அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதி களில் உலக வங்கி நிதியில் 44.88 கி.மீ நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டிலும்,  சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் 50  கி.மீ நீளத்திற்கு ரூ.255 கோடி மதிப்பீட்டி லும், மாநிலப் பேரிடர் மேலாண்மை  நிதியின் கீழ் 59.5 கி.மீ. நீளத்திற்கு ரூ.232 கோடி மதிப்பீட்டிலும், மூலதன நிதியில் 11 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் சென்ற 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெரும் பாதிப்பை சந்தித்த  தியாகராய நகர், அசோக் நகர்,  அம்பத்தூர், வளசரவாக்கம்,  ஆலந்தூர், புளி யந்தோப்பு போன்ற பல பகுதிகளில் தற் போது பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் வட பகுதியில் உள்ள கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் 769 கி.மீ நீளத்திற்கு, ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 68 விழுக்காட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் திரு வொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூரில் வாழும் மக்கள் பயனடைவார்கள். *கோவளம் வடிநிலப்பகுதியில் 360 கி.மீ. நீளத்திற்கு. ரூ.1714 கோடி மதிப்பீட்டில் கேஎஃப்டபுள்யூ (KfW) வங்கி நிதியில் ஒரு ங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நங்கநல்லூர், கண்ணன் காலனி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதி வாக்கம், கண்ணகி நகர், எம்சிஎன் நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். மீதமுள்ள பணி கள் நிறைவேற்றப்படும் போது,  இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி உள்ளிட்ட சென்னையின் தெ ன்பகுதிகளில் வாழும் மக்கள் பயனடை வார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது, சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறை க்கப்படும் என்று நான் கருதுகிறேன்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை என்ன? 

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழு மையாகப் பாதுகாப்பது மிகமிக அவசிய மானதாகும்.  தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாத தாகும்.  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும்.  இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவு படுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நட வடிக்கை எடுத்து வருகிறது.  அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது பெருந்திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த பெருந்திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும்.  சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது பெருந்திட்டம் (Third Master Plan) நிச்சயம் வழிவகுக்கும்.