சென்னை,பிப்.8- நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக நடந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் எதிர் கட்சித் தரப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகை யில்,“அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு பெற பல்வேறு நடவடிக் கைகளையும் மேற்கொண்டது. பல்வேறு அரசியல் அழுத்தத்திற்கும் இடையில் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டோம்” என்றார். நீட் எதிர்ப்பில் அதிமுக எப்போதும் பின்வாங்கி யது இல்லை. அதிலிருந்து ஒரு துளிகூட தடம் மாறவும் இல்லை. ஆனால் அதிமுக யாருக்கோ அடி பணிந்து விட்டது என்ற தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக அரசு மேற்கொள்ளும் சட்டப் போராட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை” என்றார். விஜயபாஸ்கர் பேசும்போது கூறிய ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. முதலமைச்சர் மற்றும் அவை முன்னவர் துரைமுரு கன் ஆகியோர் தலையிட்டு அமைதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“நீட் எதிர்ப்பு விவகாரத் தில் அதிமுக எப்போதும் உறுதியாக உள்ளது என்றும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக ளுக்கும் முழு ஆதரவு அளிக்கும் அதில் எந்த மாற்ற மும் இல்லை” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராமச்சந்தி ரன்,“ஏழை மாணவர்களின் கல்வி கனவு நீட் தேர்வால் கலைந்துள்ளது, நீட் திணிக்கப்பட்டு இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கைகோர்ந்து நிற்போம்” என்றார். காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,“ தனது வரம்புக்குள் செயல் செயல்படவேண்டிய ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்ற நிறைவேற்றி அனுப்பிய மசோ தாவை திருப்பி அனுப்பி ஒட்டுமொத்த தமிழகத்தை யும் அவமானப்படுத்தியுள்ளார். வேதனைப்படு தியிருக்கிறார். எனவே, நமது முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்து வரலாறு படைக்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நிற்கும்” என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி,“ நீட் சமூக நீதிக்கு மட்டும் எதிரானது அல்ல, ஒட்டுமொத்த இயற்கை நீதிக்கும் எதிரானது. ஆகவே, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம். மனித நேயமக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, “தீட்டு என்று சொல்லி ஒதுக்கியவர்கள், இன்று நீட் என்று ஒதுக்குகிறார்கள். ஆகவே நீட் என்ற அரக்கனை ஒழிக்கும் வரைக்கும் அரசுக்கு அனை வரும் தோள்கொடுப்போம்” என்றார். பாமக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழர் வாழ்வுரிமை, புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.