ஆட்சியாளர்களுக்கு நற்பெயரை பெற்றுத் தரும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக!
தமிழக அரசுக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வேண்டுகோள்
திண்டுக்கல், மே 26 - தமிழக ஆட்சியாளர்களுக்கு நற்பெயரை பெற்றுத் தரக் கூடிய பணியில் ஈடுபட்டுள்ள சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கு அவர் களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவை உறுப் பினர் ஆர்.சச்சிதானந்தம் கேட்டுக் கொண்டுள்ளார். சத்துணவு ஊழியர் சங்க மாநாடு நிறைவையொட்டி, திண்டுக் கல் மாவட்டத்தில் மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பேசியதாவது: சத்துணவு திட்டம் மட்டுமல்ல, இன்றைக்கு காலை உணவுத் திட்டம் கூட தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்ற திட்டமாக உள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் எல்லாம் ஆட்சியை தக்க வைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது. கல்லூரிகளில்கூட இந்த திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களால் அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தருகிற நிலை யில், அதில் பணியாற்றும் ஊழி யர்களின் கோரிக்கைகளை கனி வோடு பரிசீலிக்க வேண்டும். காலமுறை ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கை, இந்த சங்கம் உருவான நாள் முதல் வைக்கப்படு கிற கோரிக்கையாக உள்ளது. எனவே இந்த கோரிக்கையின் நியா யத்தை அரசு உணர வேண்டும். அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி உள்ளது. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசாங்கம் மாநில அரசுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமி ழகத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அகில இந்திய அளவில் தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகள வில் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. நிதி வருவாய் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய பங்குத் தொகையைக்கூட ஒன்றிய அரசு ஒதுக்க மறுக்கிறது. கல்விக் கான நிதியை ஒதுக்க மறுக்கிறது. கேரளாவிற்கும், மேற்குவங்கத்திற் கும் கல்வி நிதியை ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதலமைச்சர் குரல் கொடுத்து வரு கிறார். எனவே தமிழக அரசிற்கு ஏற்பட்டி ருக்கிற நெருக்கடி நமக்கு தெரி கிறது. நாமும் ஒன்றிய அரசை தமிழ கத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2025 ஜுலை 9 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது. சத்துணவு ஊழியர்களும் அந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளி வர்க்கத்து டன் கரம் கோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.