அடிமனைப் பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இது தொடர்பாக, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்வின் போது வழங்கப்பட்ட மனுக்கள் கவனிக்கப்படவில்லை.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பலமுறை அளிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை.அறநிலையத்துறையின் அதிகாரத்துவப் போக்கு
உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் தன்னிச்சையாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் அடிமனை பயனாளிகளுக்கு அதிக வாடகை விதிப்பு.
கிராமப்புறங்களில் குத்தகை விவசாயிகளுக்கு மறு ஏலம் மூலம் குத்தகை தொகை உயர்வு
1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி வழங்கப்பட்ட நிலங்களை மீண்டும் கோவில் நிலங்களாக மாற்றும் முயற்சி
சட்டவிரோத நடவடிக்கைகள்
அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34 a-ஐ மீறி, சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயிப்பது
தவறான முகவரி, தவறான அளவீடு, தன்னிச்சையான வாடகை நிர்ணயிப்புஅரசின் மௌனம்
லட்சக்கணக்கான அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் அரசு கொள்கை முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு பதிலாக மௌனம் காப்பது சரியல்ல.
பாஜகவின் பாதையில் பயணிக்கும் இந்துத்வா சிந்தனை உள்ள சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களை பாதிக்கும்போது மக்களை காப்பாற்ற வருவது தானே மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும்.
முந்தைய முயற்சிகள் மற்றும் வாக்குறுதிகள்
2007-2010 காலகட்டத்தில் நடைபெற்ற போராட்டங்க ளின் விளைவாக அரசாணை 298 கொண்டுவரப்பட்டது
2011, 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசாணை 318 தற்போது நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
கோரிக்கைகள்
1. எனவே, தமிழக முதல்வர், அரசாணை 298 போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
2. உயர்நிலைக் குழு அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்
3. அரசாணை 318க்கு எதிரான நீதிமன்ற தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
4. கோவில் மற்றும் மட நிலங்களை அரசுடமையாக்கி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்
வாழ்விட உரிமை
குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கலாம்,
மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கலாம். அவை மிகுந்த வரவேற்பு உரியதே. ஆனால் அவை ஒரு
அரசு மக்களுக்கு செய்யும் பொருளாதார மேம்பாட்டு சலுகைகள். அவை வரவேற்கப்பட வேண்டியவை. அதே வேளையில், நிலம் அற்ற மக்களுக்கு தேவையானது வாழ்விட உரிமையே!
உழுபவருக்கே நிலம் சொந்தம்; குடியிருப்பவருக்கே அடிமனை சொந்தம் என்பது வானத்தில் மிதக்கும் பெரும் தனவான்களின் கோரிக்கை அல்ல. நிலத்தில் வாழும்
ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் கோரிக்கை. அதை நிறைவேற்றி வைப்பது அரசின் கடமை.