tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இலவச ஏசியா?  தமிழக அரசு மறுப்பு  

சென்னை: தமிழகத் தில் கோடை வெயில் வறுத் தெடுக்கும் நிலையில், ‘கோடை கால வெப்பத்தைத் தணிக்க  ஒன்றிய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்’ என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ  ஒன்று சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. இது குறித்து தமிழக அரசின் அதி காரப்பூர்வ சமூக ஊடக கணக் கான தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “அது முற்றிலும் வதந்தி. ஒன்றிய  அரசு இப்படியான எந்த  திட்டத்தையும் அறிவிக்க வில்லை. இது வதந்தி என்று  ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்து உள்ளது” என அறிவித்திருக் கிறது.

‘கல்லூரிக் கனவு’ திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை புதன்கிழமை (மே 14)  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வித்துறை யின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்புக்கு அரசு துணை நிற்கும் இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘நான் முதல்வன் திட்டம்’ லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர் களுக்கு வழிகாட்டி அவர்களின் வாழ்வை மாற்றி வருகிறது என்றும் மேலும், பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே  ஆட்சேர்ப்பு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவன  தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்ற மாண வர்களையும் பாராட்டினோம். தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு நமது அரசு என்றும் துணை நிற்கும்” என தெரிவித்திருக்கிறார்.

பெண்ணாடத்தில் நிற்கும் பல்லவன் ரயில்

சென்னை: எழும்பூர் - காரைக்குடி இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் அதிவிரைவு ரயில் இரு மார்க்கத்திலும் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதேபோல்  தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் கல்லிடைக்குறிச்சியில் ஒரு  நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித் துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு:  பதில் அளிக்க உத்தரவு  

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது கொள் முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 6  ஆம் தேதி முதல் 3 நாட்கள் வரை சோதனை நடத்தினர். இது  தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலை யில், இந்த மனு புதனன்று விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக்  முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக, ஒன்றிய அரசுகள், அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ஞானசேகரன் மீது மேலும்  ஒரு பாலியல் வழக்குப் பதிவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடை யாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்  புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது  சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஞானசேகரன்  மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேக ரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2 நாள் காவலில்  எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசி ஐடிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

காட்சிக்கலை படிப்புக்கு  விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை எனும் நான்காண்டு கால பட்டப் படிப்பிற்கான, 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் 28.4.2025 முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க 28.5.2025 கடைசி நாள் என்பதால், கலை ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு www.film institute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம்  செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களு டன் 28.5.2025 அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.