அதிமுக முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கிய வழக்கு: மீண்டும் சூடுபிடித்துள்ளது
சென்னை, மே 13- சென்னை அருகே பெருங்களத் தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க ஸ்ரீராம் பிராப் பர்ட்டீஸ் நிறுவனத்தின் மூலம், 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் அதிமுக முன்னாள் அமைச் சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடியை, தனது மகன் நடத்தும் நிறு வனம் மூலம் லஞ்சம் பெற்றது தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அமலாக் கத்துறை சார்பில் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். அவர் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கூடுத லாக விவசாயத் துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார். அப்போது சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் 57.94 ஏக்கரில் 1,453 வீடுகள் கட்ட முடிவு செய்தது. இதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்தி லிங்கம், சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளார். இதற்காக ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், தங்களிடம் ஸ்கிராப் பெற்றும், 36 ஸ்கிராப் விற்ப னையாளர்கள் மூலம் வைத்திலிங்கத் தின் மகன்களுக்குச் சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாரத் கோல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத் திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.27.90 கோடி பணம் கடனாக வழங்கியது போல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள், லஞ்ச பணம் கொடுத்த ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.27.90 கோடி லஞ்சம் பணம் பெற்றது தொடர்பாக முக்கிய ஆவ ணங்கள் சிக்கின. அதேநேரம் சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையின்படி விசா ரணை நடத்தினர். அந்த விசாரணை யில், 36 ஸ்கிராப் விற்பனையாளர் கள் வைத்திலிங்கம் மகன்கள் நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாரத் கோல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவ னத்திற்கு நிலங்கள் வாங்க முன்பண மாக கொடுத்தது தெரியவந்தது. ஆனால் வைத்திலிங்கம் மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டு வரை எந்த நிலங்களும் வாங்கவில்லை. அதேநேரம் கடனாக பெற்றதாக கூறிய ரூ.27.90 கோடி பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவ னங்கள் திருப்பித் தரவில்லை. மேலும், 1,453 வீடுகள் கட்ட ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத் திற்கு சிஎம்டிஏ அனுமதி பெற அப்போ தைய அமைச்சர் வைத்திலிங்கம் தனது மகன்கள் நடத்தும் நிறுவ னங்கள் மூலம் போலியான 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் உதவி யுடன் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது. இருந்தாலும் இந்த வழக்கில் ரூ.27.90 கோடி பணம் வழங்கிய 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், லஞ்சப் பணத்தை, போலியாக உருவாக்கப் பட்ட 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் பெற்றது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் வழக்கு தொடர்பாக கூடுதல் ஆதா ரங்கள் அடங்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி யுள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின்படி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் நடத்தும் நிறுவ னங்கள் மீது மீண்டும் விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் என்றும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கம் மற்றும் அவரது மகன்களை கைது செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.