tamilnadu

img

மேகமலை வனப்பகுதியில் காட்டுமாடு பிணமாக மீட்பு

தேனி ,ஜூலை 7- மேகமலை வனப்பகுதியில் அமைந்துள்ளது இந்திராநகர் மலை கிராம பகுதி. இங்கு மர்மமான முறையில்  3 மதிக்கத்தக்க ஆண் காட்டு மாடு இறந்து கிடந்தது. இத்தகவல் அறிந்து நேரில் பார்த்த மலைகிராம பொதுமக்கள் மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மேகமலைவனத்துறை வனச்சர கர் சதீஷ்கண்ணன், வனவர் சோனைமுத்து, வனக்காவலர் அழகர்சாமி, வேட்டை தடுப்புக்காவலர்கள் பால்பாண்டி, செங்கோட்டையன்  ,கால்நடை மருத்துவர் வெயிலான் ஆகியோர் இறந்து கிடந்த மாட்டை மலைப்பகுதியில் ஆய்வு செய்து பின்பு  மாட்டின் உடலை பிரேதப் பரி சோதனை செய்து மலைப்பகுதியில் புதைத்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காட்டு மாடு எவ்வாறு இறந்தது என்பது பற்றி அப்பகுதியில் உள்ள மலைக்கிராம பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவசோத னைக்கு பின்பு காட்டுமாடு எவ்வாறு இறந்துள்ளது என்பது பற்றி தகவல் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.