திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி, ஏப்.10 - வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத் திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் நான்கு பயணிகளிடம் வெளிநாட்டு பணம் சிக்கி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல விருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.19,05,200 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் (சவுதி ரியால்) பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பயணி களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு இ-சேவை முகாம்
தஞ்சாவூர், ஏப்.10 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், சிறப்பு உயர்கல்வி சேர்க்கை செயல் முறையை எளிதாக்கும் வகையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் உள்ள 137 பள்ளிகளில் சிறப்பு இ-சேவை முகாம்கள் நடைபெற்றன. இதனால் மாணாக்கர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்து, வருமானம், சாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட தொடர்புடைய ஆன்-லைன் சான்றி தழ்களுக்கு எளிதாக விண்ணப்பிக்க, ஒவ்வொரு பள்ளியு டனும் ஒரு இ-சேவை மையத்தை இணைத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் மொத்தம் 2,579 மாணாக்கர்கள் இந்த செயல்முறையின் மூலம் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
வாகனம் வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவர் கைது
தஞ்சாவூர், ஏப்.10 - குறைந்த தொகை முதலீடு செய்தால் வாகனம் வாங்கித் தருவதாக கூறி 22 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்றை கொடுத்தது. அதில் “குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கித் தரப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதைப் பார்த்த தஞ்சை மேலவீதியை சேர்ந்த வைத்தீஸ் வரன் என்பவர், அதை நம்பி சிறு தொகையினை கட்டி இருசக்கர வாகனத்தை வாங்கினார். அதன் பின்னர் மேலும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் 4 சக்கர வாகனம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்தொகை யாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் தொகையினை பெற்று ஏமாற்றி உள்ளனர். இதுபோன்று அந்த நிறுவனம் 22 நபர்களிடமும் பண மோசடி செய்ததாக வைத்தீஸ்வரன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அந்த நிறுவனம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படு கிறது. புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அர்பஷ் (46), சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (30) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் கோயம்புத்தூரில் இருப்பதாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் கோயம் புத்தூர் சென்று அர்பஷ், ஹரிபிரசாத் ஆகிய 2 பேரை யும் புதன்கிழமை கைது செய்தனர். இது போன்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த 3 பேருக்கு 5 ஆண்டு சிறை
தஞ்சாவூர், ஏப்.10 - கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். வடலூர் - குறிஞ்சிப்பாடி சாலையில் அண்ணா நகர் அருகே அவர்கள் சென்ற போது, அங்கு சந்தேகத்திற் கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த அசோக், சுரேஷ், ஹரிகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, அவர்களி டம் 5 கிலோ 865 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு தஞ்சையில் உள்ள இன்றிய மையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி சுந்தர்ராஜன் முன்னி லையில் விசாரணைக்கு வந்த போது, அசோக், சுரேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.