tamilnadu

இதுதான் சென்னை! இதுதான் இந்தியா!!

40 ஆண்டு காலமாக இந்து கோவிலில் தயாரிக்கும் நோன்பு கஞ்சி முஸ்லிம்களுக்கு இஃப்தாரின் பொழுது தரப்படுகிறது. இது நடப்பது சென்னையில்! சுஃபிதார் டிரஸ்ட் எனும் அமைப்பின் சார்பாக 1200 பேருக்கு மயிலாப்பூரில் இந்து கோவிலில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பெரிய மசூதியில் பரிமாறப்படுகிறது. இது தொடங்கியது தாதா ரத்தன்சந்த் என்பவரால்! இவர் பிரிவினையின் பொழுது சிந்த் பகுதியிலிருந்து சென்னையில் குடியேறினார். அவர் தொடங்கி வைத்தது இன்னும் தொடர்கிறது. இதில் விசேடம் என்னவெனில் நோன்பு கஞ்சியை பரிமாறும் பொழுது இந்து சகோதரர்களும் குல்லாய் அணிந்து கொள்வதுதான்! இத்தகைய மத ஒற்றுமையைத்தான் சீர்குலைக்க சங் பரிவாரம் முயல்கிறது. பா.ஜ.க. அரசை அகற்றுவோம்! மத ஒற்றுமை காப்போம்!!