சென்னை,மார்ச் 10- தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் வெள்ளியன்று (மார்ச்.10 ) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. சென்னையில் மட்டும் 200 இடங்க ளில் முகாம்கள் நடத்தினர். இந்த முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, தேவையான மருந்துகள், மாத்திரைகள் வழங்கப் பட்டன. மேலும், காய்ச்சல் பாதிப்பு களுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.