சென்னை, ஜூன் 22- நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலக் குழுக்கள் சார்பில் சென்னை யில் வியாழனன்று (ஜூன் 22) தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் பெ.சண்முகம், எஸ்.குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் நீதிபதி து.அரிபரந்தா மன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டப்பேர வையில் பல மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியது. அதில் ஒன்று, விவசாயிகளின் நிலத்தை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அபகரிக்கும் நில ஒருங் கிணைப்புச் சட்ட மசோதா. கார்ப்பரேட் நிறுவனங்கள் 240 ஏக்கருக்கு மேல் எவ்வளவு நிலம் கேட்டாலும் அதை வழங்க நில ஒருங்கிணைப்புச் சட்டம் வழிவகுக் கிறது. எப்படி பரந்தூரில் விமான நிலை யத்திற்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதோ அது போல் வழங்கப்படும். அரசின் சுகாதாரத்துறை (மருத்துவமனைக்காக), வரு வாய்த்துறை, கல்வித்துறை (பள்ளி, கல்லூரிக்காக) என எந்த துறையின் நிலமாக இருந்தாலும், ஏரி, குளம், குட்டை, ஆறு என அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது என்று கூறினார். சென்னையிலே அதானி துறை முகத்திற்கு நிலத்தில் 2 ஆயிரம் ஏக்கரும் கடலில் 2 ஆயிரம் ஏக்கர் என 4 ஆயிரம் ஏக்கர் தாரை வார்க்கப் பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி னார்.
முதலமைச்சரிடம் முறையிடுவோம்!
போராட்டத்தை நிறைவு செய்து பெ.சண்முகம் பேசுகையில், இதற்கு முன்பே ஒன்றிய, மாநில அரசுகளால் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இருக்கிறது, அதில் உரிய இழப்பீடு வழங்கவும், நிலத்தை திரும்ப ஒப்ப டைக்கவும் வழி வகை இருந்தது. ஆனால் இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 என்பது மிக மோசமான சட்டமாகும். நவீன தாராளமயக் கொள் கைகளை தீவிரமாக அமல்படுத்தி யதன் ஒரு பகுதியே இந்த புதிய சட்டம். இந்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி விவசாயிகள், பொதுமக்களிடம் என அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்று வருகிறோம். விரைவில் முதலமைச்சரை சந்தித்து சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்து வோம். சட்டம் வாபஸ் பெறவில்லை என்றால் விவசாயிகள் உள்ளிட்டு அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ். மாசிலாமணி, ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் மாநில ஒருங்கி ணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஷேக் முகமது அலி, மு.வெற்றிச் செல்வன் (பூவுலகின் நண்பர்கள்) ஆகியோரும் பேசினர். இதில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, பொதுச் செயலாளர் இரா.சர வணன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி. பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் உலகநாதன், நிர்வாகிகள் துளசி நாராயணன், துளசி மணி உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயி ரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.