tamilnadu

img

போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி தேவை

சென்னை, அக்.19- தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத் தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் அக்டோபர் 19 சனிக்கிழமையன்று நடை பெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல் துறை இயக்குநர்கள் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகி றோம். போதைப் பொருட்கள், தடை  செய்யப்பட்ட புகையிலை பொ ருட்கள், மாநிலங்களுக்கு இடையே யான குற்றச்செயல்கள், இணைய வழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நாம் இங்கு கூடியுள் ளோம். இத்தகைய குற்றங்களை  எதிர்கொள்வதில் தமிழக காவல் துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழக காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநி லத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப் பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற் பனை செய்தவர்களுக்கு சிறை தண் டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துக்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி தேவை. உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார். இந்த மாநாட்டில் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர்கள் சங்கர் ஜிவால் (தமிழ்நாடு), அலோக் மோகன் (கர்நா டகா), சேக் தர்வேஷ் சாகேப் (கேரளா), ஷாலினி சிங் (புதுச்சேரி), துவாரகா திருமல ராவ் ( ஆந்திரா) மற்றும் அந்தமான் நிக்கோபார் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.