tamilnadu

img

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

திருவாரூர், ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவாரூர் எட்டியலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புதன் கிழமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒளிரவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் இரா.குணசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர் எஸ்.நெப்போலி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் நடப் பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த  விழிப்புணர்வு உறுதிமொழியை ஆசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் எடுத்துக் கொண்டனர். ஆட்சியர் அலுவலகம் திருவாரூர் மாவட்ட வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட வளாகத்தில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் மாவட்ட வரு வாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட கல்வி  அலுவலர் சௌந்தரராஜன் ஆகியோர்  மரக்கன்றுகளை நட்டு வைத்த, விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், வனச்சரக அலுவலர்கள் சைதனி, ரஞ்சித், வனவர் இந்துமதி, பாலசுப்ரமணியன், பசுமை தோழர் பேகன் ஜமீன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.